Wednesday, May 16, 2012

டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா? - மறுக்கிறார் நயன்தாரா!!!

Wednesday,May,16,2012
போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான்.

ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

"டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா.

பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது

உதயநிதியை தொடர்ந்து விஜய்?!!!

Wednesday,May,16,2012
முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படம் முடிந்ததும் அடுத்ததாக விஜய் நடிக்கப்போகும் படம் எது? என்ற கேள்வி தான் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் கேள்வியாக உள்ளது. இயக்குனர் கவுதம் மேனனின் யோஹான், மதராசப்பட்டினம் இயக்குனர் விஜய் என சில இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் இயக்கபோவதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் விஜய் இதை பற்றி அறிவித்ததோடு சரி அதை பற்றி எவ்வித தகவலும் வெளியிடவில்லை. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ‘யோஹான் ஜூலை மாதத்திலிருந்து தனது பயணத்தை துவங்குவான்’ எனக் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இந்த அறிவிப்பிற்கு எவ்வித ரெஸ்பான்சும் வராததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் பரப்பாக பேசப்படும் சங்கதி, விஜய் அடுத்ததாக நடிக்கவிருப்பது இயக்குனர் ராஜேஷ் படத்தில் தானாம். சமீபத்தில் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’ஓ.கே ஓ.கே படம்’ கலெக்‌ஷனை அள்ளியது.

இயக்குனர் ராஜேஷும் விஜய்யும் இணைவதற்கு என்ன காரணம் என்றால் முழுநீள காமெடிப் படத்தில் நடிக்கவேண்டும் என விஜய் சமீபத்தில் கூறியது தானாம். அதற்காகத் தான் விஜய் ஜனவரி மாதம் முதல் தேதிகளை எந்த இயக்குனருக்கும் ஒதுக்கவில்லையாம்.

துப்பாக்கி படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துவிட்டு கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பாரா என்ற மற்றொரு கேள்வியை முன் வைக்கிறது தமிழ் சினிமா?

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,May,16,2012
சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்தில் 2 வேடத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் பரிசாக பெற்ற த்ரிஷா, அதை பொக்கிஷமாக பாதுகாக்கிறாராம்.

சிம்புவை வைத்து இயக்குவதாக கூறிய ‘வட சென்னைÕ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கைவிடவில்லையாம்.

மலையாளத்தில் படங்கள் இல்லாமல் கன்னடத்துக்கு சென்ற பாவனா, மீண்டும் திருவனந்தபுரம் லாட்ஜ் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இனி வருடத்துக்கு ஒரு படம் இயக்க முடிவு செய்திருக்கிறாராம் பாலாஜி சக்த¤வேல்.

கோடம்பாக்கம் கோடங்கி : அலறும் டான்ஸ் மாஸ்டர்!!!

Wednesday,May,16,2012
பாலிவுட்ல ரிட்டயர்டு நடிகைகள் படம் இயக்குறாங்களாம்.... நந்தித நடிகையை தொடர்ந்து, இப்போ அந்த ஆசை மனிஷ நடிகைக்கும் வந்திருக்காம். அதுக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்க ந¤றைய நேரம் செலவிடுறாராம். ஏற்கனவே பெண் இயக்குனருங்க இயக்குன படங்கள டிவிடில பாக்க¤றதோட ந¤றைய வெளிநாட்டு படங்களையும் பாக்குறாராம்... டைரக்ஷன் பண்றதுக்காக இப்போதான் தயாராயிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பெண்களுக்கு ஆதரவான ஒரு படத்தை இயக்குவேன்னு பாக்க¤றவங்ககிட்டயெல்லாம் மனிஷ நடிகை சொல்றாராம். சொந்த சோகக் கதையைத்தான் நடிகை படமாக்கப்போறதா பாலிவுட்ல பேசிக்கிறாங்களாம்...

உச்சநடிகரோட ஆட்டோக்கார கதை படத்தை தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு இந்தியில உல்டா பண்ணப்போறதா தகவல் வந்துச்சு... இது தெரிஞ்சு, நிறைய பேர் மாஸ்டர்கிட்ட விசாரிச்சாங்களாம்... விசாரிச்சாங்களாம்... மாஸ்டரு அலறிப்போயிட்டாராம். ஒரிஜனல் பட கம்பெனி விசாரிக்கிறதுக்கு முன்னாடி, நாமளே சொல்லிடலாம்னு, Ôஅப்படி எதுவும் ஐடியா இல்லை. அந்த படத்தை உல்டா பண்ணலேÕன்னு மாஸ்டரு விளக்கம் கொடுத்துட்டாராம்...

அங்காடி நடிகை கவர்ச்சிக்கு மாறினதால வாய்ப்புகள் வருதாம்... டோலிவுட்ல தர்ற பேமென்ட்டுக்கு நடிகை டூ பீஸ்ல நடிக்க சம்மதிப்பாருன்னு பேசுறாங்களாம்... காத்துவாக்குல இதை கேள்விப்பட்ட சில டோலிவுட் இயக்குனருங்க அங்காடி நடிகைகிட்ட கால்ஷீட் கேட்டிருக்காங்களாம். இந்த நேரத்துல கிளாமரா என்டர் ஆன டாப் இடத்த பிடிச்சிடலாம்னு ஆசை காட்டுறாங்களாம். காசும், டாப் இடமும் அங்காடி நடிகைக்கு ஆசையை மூட்டிவிட்டிருக்காம்...

அதிக சம்பளத்தில் வாய்ப்பு வந்தும், அஜீத்துக்காக கன்னட படத்தை உதறினார் நயன்தாரா!!!

Wednesday,May,16,2012
அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சின¤மாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவர், அஜீத்துக்கு ஜோடி. இப்பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்க¤டையே கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே உபேந்திராவுடன் சூப்பர் கன்னட படத்தில் நயன்தாரா நடித்தார். அப்படத்துக்காக அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. கன்னட சினிமாவில் பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் நயன்தாராவுக்கு கிடைத்தது.

இதையடுத்து இப்போது வாய்ப்பு வந்துள்ள சுதீப் படத்துக்காகவும் நயன்தாராவுக்கு பெரிய தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. கால்ஷீட் கூட குறைவான நாட்கள்தான். ஆனால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நயன். காரணம், அஜீத் படம். அடுத்த மாதம் முதல் அஜீத் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாலும் அடுத்தடுத்த மாதங்களில் அப்பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாலும் இம்முடிவை எடுத்துள்ளார். இது பற்றி நயன் தரப்பினர் கூறும்போது, கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால் சுதீப் படத்தில் நடிக்கவில்லை. சம்பளத்தைவிட கொடுத்த வாக்குறுதிதான் நயன்தாராவுக்கு முக்கியம். அஜீத் படத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார். அதை மாற்றிக் கொள்ள மாட்டார் என்றனர்.

சென்சார் சொல்லியும் கேட்கவில்லை : குத்துபாட்டை நீக்க இயக்குனர் மறுப்பு!!!

Wednesday,May,16,2012
சென்சார் போர்டு நீக்கச் சொல்லியும் குத்துப்பாட்டை நீக்க மறுத்ததால் படத்துக்கு ‘ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அருண்ராஜ், லாவண்யா, பிரியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘முத்து பேச்சி. இப்படத்தை இயக்கும் கே.ஜி.சாய்ராம் கூறியதாவது: ஹீரோவுக்கு ஒரு பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்த காதலால் ஏற்படும் பின்விளைவுகள் மோதலாக மாறி கலவரமாகிறது. இந்த காதல் வெற்றி பெறுகிறதா என்பதை நட்பை மையமாக வைத்து படம் கூறுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், தளவாய்புரம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

இப்படத்தை சென்சாருக்கு போட்டு காட்டியபோது மது குடிப்பதுபோல்வரும் காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். லாவண்யா நடனம் ஆடிய ‘சரக்கு சரக்கு சரக்குÕ என்ற வரிகளுடன் தொடங்கும் குத்து பாடலை நீக்கினால் ‘யூÕ சர்டிபிகேட் தருவதாக சென்சார் அதிகாரிகள் கூறினர். ரூ.3 லட்சம் செலவில் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினால் கதை வலுவிழந்துவிடும் என்பதால் நீக்க மறுத்துவிட்டேன். இதையடுத்து ‘ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தரமான படங்களில்கூட ஒன்றிரண்டு காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு ‘ஏ சான்று கொடுக்கப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது

ஷங்கர் படத்தில் பிசி.ஸ்ரீராம்?!!!

Wednesday,May,16,2012
ஷங்கர் தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். இனி அவர் மூச்சு விடுவது படப்பிடிப்பு முடிந்த பிறகுதான். இந்தமுறை அவருக்கு கதை, வசன இலாகாக்களில் உதவி செய்கிறவர்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா.

விக்ரம் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். யூக செய்திதானே தவிர இதுவரை அதிகார‌ப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஸ்கி‌ரிப்ட் முழுமையடைந்த பிறகே ஹீரோயின் வேட்டை. இந்நிலையில் இரு கூடுதல் தகவல்கள் இந்தப் படத்தை சுற்றுகின்றன.

ஒன்று படத்துக்கு ஷங்கர் தேர்தல் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறாராம். இரண்டு, கேமராமேன் அனேகமாக பி.சி.ஸ்ரீராமாக இருக்கலாம். ஹீரோ விக்ரம் என்ற தகவலுடன் இதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷா!!!

Wednesday,May,16,2012
.பி.எல். கிரிக்கெட் ஜுரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நடிகர்-நடிகைகளையும் அதுவிட்டு வைக்கவில்லை. படப்பிடிப்பு இடைவேளையில் நண்பர்களுக்கு போன் போட்டு ஸ்கோர் கேட்ட வண்ணம் உள்ளனர்.

நடிகை திரிஷாவோ தெண்டுல்கர் கிரிக்கெட் பேட் ஒன்று திடீரென தனக்கு கிடைத்ததாக மகிழ்ச்சியில் குதிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்று முக்கிய பிரமுகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை அனுப்பியுள்ளது. திரிஷாவுக்கும் அந்த பேட் வந்துள்ளது. இது குறித்து திரிஷா கூறியதாவது:-

சச்சின் தெண்டுல்கர் விளம்பர தூதராக உள்ள நிறுவனம் ஒன்று அவர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை வாங்கி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. எனக்கும் வந்துள்ளது. இது மறக்க முடியாத பரிசு.

நான் கிரிக்கெட் ரசிகை அல்ல. ஆனால் சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான மனிதர். நாகரீகம் தெரிந்தவர். சில பிரபலங்களை நமக்கு பிடிக்கும். ஏன் என்று சொல்ல தெரியாது. அதுபோல் சச்சின் மேல் எனக்கு பற்று உள்ளது.

ஸ்ருதிஹாசன் - கடைசியாக கிடைத்த வெற்றி!!!

Wednesday,May,16,2012
ஸ்ருதிஹாசன் குறுகிய காலத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் நடித்துவிட்டார். ஆனால் வெற்றி என்ற மூன்றெழுத்து மட்டும் அவருக்கு எட்டமாகவே இருந்தது. 7 ஆம் அறிவு, 3 கூட பெ‌ரிய வெற்றி என்று சொல்ல முடியாது.

இந்த விளம்பர வெற்றிகளைத் தாண்டி நிஜமான முதல் வெற்றியை தெலுங்கில் அறுவடை செய்திருக்கிறார் ஸ்ருதி.

பவன் க‌ல்யாணுடன் இவர் நடித்த கப்பர் சிங் வெளியா‌கியு‌ள்ளது. இதில் ஸ்ருதிக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது கொமரம் புலி, பன்சா என்று அடுத்தடுத்து பஞ்சரான பவன் கல்யாணின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

கப்பர் சிங் இந்தியில் வெளியான டபாங்கின் ‌ரீமேக். இப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்யப்பட்டு தோல்வியடைந்தது. இதில் நடித்த ‌ரிச்சா முடிந்தவரை சொதப்பியிருந்தார். அதே நேரம் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நிறைவாக செய்திருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

'டேம் 999' படம் அரசியல் கதை என்பது தெரியாமல் நடித்துவிட்டேன்: வினய் வருத்தம்!!!

Wednesday,May,16,2012
முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்து கடந்த வருடம் ரிலீஸ் செய்த ‘டேம் 999’ படத்துக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.

இதில் வினய் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் ‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மாதேஷ் இயக்கும் ‘மிரட்டல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

மிரட்டல் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த வினய்யிடம் தமிழர்களுக்கு எதிரான ‘டேம் 999’ படத்தில் நடித்தது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த வினய் கூறியதாவது:-

‘டேம் 999’ படத்தில் நடித்தது பற்றி தமிழ் மக்களிடம் விளக்கமா சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லி நடிக்க கேட்டனர். அதில் உள்ள அரசியல் எனக்கு அப்போது தெரியவில்லை. ஒரு படத்தக்கான கதை என்ற ரீதியில் தான் அதை பார்த்தேன். ஒரு நடிகனாக மட்டுமே அதில் நடித்தேன். அதன் பின்புலத்தில் உள்ள விஷயங்கள் சர்ச்சைகள் எதுவும் எனக்கு தெரியாது.

தமிழில் ஏற்கனவே முன்று படங்களில் நடித்து விட்டேன். இங்குள்ள ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்று வருடத்துக்கு பின் மிரட்டல் படம் வருகிறது. இப்படத்தின் கதையை இயக்குனர் மாதேஷ் சொன்னபோது ரொம்ப பிடித்தது. நடிகக் சம்மதித்தேன். ஒவ்வொரு சீனையும் கவனமாக ரொம்ப மெனக்கெட்டு எடுத்துள்ளார்.

காதல், குடும்ப சென்டி மெண்ட், காமெடி ஆக்ஷன், எல்லாம் படத்தில் இருக்கிறது. சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது பிரபு குடும்பத்தினர் எனக்கு விருந்து அளித்தது மறக்க முடியாத அனுபவம் சிவாஜி ஓர் சகாப்தம் அவர் அறையை சுற்றி காண்பித்தார்கள். பிரபுவை போல் நல்ல மனிதரை காண்பது அபூர்வம்.

என்று கூறினார்.

அஜித்தை பின்பற்றி புரட்சித் தளபதி பட்டத்தை உதறிய விஷால்!!!

Wednesday,May,16,2012
அஜித்தை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என அழைத்து வந்தனர். அவரது படங்களில் அஜித் பெயருக்கு முன்னால் இப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டது. போஸ்டர்களிலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றே குறிப்பிடப்பட்டன.

ஆனால் அஜித் திடீரென்று அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப்பெயரை பயன்படுத் தக்கூடாது என தடை விதித்து விட்டார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது.

அவரது வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை திடீரென உதறிவிட்டார். சமீபத்தில் ரிலீசான அவரது படங்களின் டைட்டில்களில் புரட்சித் தளபதி விஷால் என்றே குறிப்பிடப்பட்டன. ரசிகர்களும் புரட்சித்தளபதி என போஸ்டர்கள் ஒட்டினர். ரசிகர்கள் அந்த பட்டத்தை சூட்டியதாக விஷால் கூறினார்.

இந்த நிலையில் திடீரென புரட்சித் தளபதி என்ற பட்டத்தை தனது பெயரில் இருந்து நீக்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிக்கும் சமர் படம் பற்றி போஸ்டர்களும் விளம்பரங்களும் வெளியாயின. அவற்றில் புரட்சித் தளபதி இடம் பெறவில்லை. வெறும் விஷால் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

சன் டிவியில் மதுரை முத்து-தேவதர்ஷினியின் புதிய காமெடி நிகழ்ச்சி!!!

Wednesday,May,16,2012
விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.

சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

'இந்தியில் பாஷா? நோ நோ...' - பிரபு தேவா!!!

Wednesday,May,16,2012
வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் கதை வேறு," என்றார்.

இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!

வருகிற வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!!!

Wednesday,May,16,2012
கன்னித்தீவு கதை மாதிரி ஆகிவிட்டது, த்ரிஷா கல்யாண செய்திகளும்... ஒரு நாள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று வந்தால், அடுத்த நாள் புதுப்படத்தில் த்ரிஷா ஒப்பந்தம் என செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.

'இதான் கடைசி, அப்புறம் போயிடுவேன்.. வாய்ப்பு கிடைக்காது.. உங்க படத்துக்கு ஒப்பந்தம் பண்ணிக்குங்க' என்று போக்குக் காட்டி வாய்ப்பு பெறும் டெக்னிக்கா இது என்றும் தெரியவில்லை!

போகட்டும்... தமிழில் இன்னும் இரு புதிய படங்களில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் செய்தி.

தெலுங்கில் மேலும் இரு படங்கள் அவர் கைவசம் வந்துள்ளனவாம். இவை போக, விஷாலுடன் சமரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிதேஜாவுடன் ஒரு படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

கோடியைத் தாண்டி சம்பளம்... இன்றைய தேதிக்கு அவர் பிஸியோ பிஸி.

"சினிமாவில் வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நல்ல வாய்ப்பையும் மறுப்பதில்லை. காரணம் எனக்கும் நடிப்பு இன்னும் அலுக்கவே இல்லை. எனவே கல்யாணத்துக்கு இது சரியான நேரமாக எனக்குத் தெரியவில்லை.

எனக்காகப் பிறந்தவர் நிச்சயம் கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்," என்கிறார்.

நல்ல ப்ளான்!

கோடையை கொண்டாடும் ஜெயா டிவியின் "சவால்"!!!

Wednesday,May,16,2012
கேம் ஷோ என்றாலே அது ஸ்டூடியோவுக்குள் மட்டும்தான் என்று இருந்த ட்ரெண்டை மாற்றி வெளியிடங்களிலும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பிருத்விராஜ். ஜெயா டிவியில் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "சவால்'' நிகழ்ச்சி பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

கோடையை கொண்டாடும் விதமாக மே மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சி `வி.ஜி.பி. யுனிவர்சல் கிங்டம்' அரங்கில் நடைபெற்று வருகிறது.

நடிகர் பிருத்விராஜ் கலக்கலாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது. கோடை சிறப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் வெளிநாட்டினரும் சவாலை ஏற்க முன்வந்து வெற்றி பெற்றனர்.

சிறுவர் முதல் பெரிய வர் வரை அனைவரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.

துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள்!!!

Wednesday,May,16,2012
துபாய்::அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.

அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

நிகழ்ச்சிகளை இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் 17,18 ஆகிய தேதிகள் வழங்கப்படும். நுழைவுச் சீட்டுக்கு http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

த்ரிஷாவின் அன்னையர் தின வருத்தம்!!!

Wednesday,May,16,2012
த்ரிஷாவின் அம்மா உமா, த்ரிஷாவுக்கு அம்மா என்று சொல்லுவதை விட அவரது நெருங்கிய தோழி என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இருவரும் தோழிகள் போல பழகுவார்கள். த்ரிஷா தனது அம்மா மீது அவ்வளவு உயிராக இருப்பவர். தான் இந்தளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே தனது தாய் தான் என்று அடிக்கடி கூறுவார். அப்படி தனது அம்மா மீது பேரன்பு கொண்ட த்ரிஷாவுக்கு அன்னையர் தினத்தன்று ஒரு சிறு வருத்தம். அதாவது அன்னையர் தினத்தன்று தனது தாயுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்பது தான். அன்றைய தினம் மைசூரில் ஒரு விளம்பர படத்திற்கான சூட்டிங் இருந்ததால் அவரால் தனது தாயுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லையாம். இருந்தும் தனது தாயை போனில் அழைத்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது வலைதளத்திலும் ஐ லவ் யு மாம், ஹேப்பி மதர்ஸ் டே என்று வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

பெண் இயக்குனரை குறைத்து மதிப்பிடுவதா? நடிகை கோபம்!!!

Wednesday,May,16,2012
பெண் இயக்குனர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ‘யுத்தம் செய்Õ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மொட்டை அடித்து நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் ‘ஆரோஹணம் என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:
திடீரென்று காணாமல் போகும் அம்மாவை தேடி அலைகிறான் மகன். அவரை கண்டுபிடித்து அழைத்து வந்தானா என்பதுதான் கதை கரு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. இந்த சம்பவம் என் கண்முன் நடந்தது. ஆனால் ஒருநாளில் முடிந்த சம்பவம் அல்ல. பல வருடம் கண்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறேன். ஒரே நாளில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அம்மா வேடத்தில் சரிதாவின் சகோதரி விஜி நடித்திருக்கிறார். மகனாக விரேஷ், மகளாக ஜெகெஹனி நடிக்கின்றனர். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு. கே இசை. இதன் ஷூட்டிங் 20 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
பெண் இயக்குனர்களால் கமர்ஷியல் படங்கள் எடுக்க முடியாது என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது தவறான கருத்து. எத்தனையோ பெண் இயக்குனர்கள் கமர்ஷியல் படங்கள் இயக்கி இருக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதுவதை கமல்ஹாசன் நடத்திய பயிற்சி கூடத்தில்தான் கற்றேன். ஒரு ஸ்கிரிப்ட்டை எத்தனை விதமாக மாற்றலாம் என்பதை அவர் சொல்லிக்கொடுத்தார். அந்த அனுபவத்தில்தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஆரோஹணம் படமே நெத்தியடியான கமர்ஷியல் படமாக இருக்கும். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன்.

Tuesday, May 15, 2012

இந்தியில் பட வாய்ப்புகள்: மும்பையில் தங்க வீடு பார்க்கிறேன்- பிரபுதேவா!!!

Tuesday, ,May, ,15, 2012
பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய 'வாண்டட்' படம் ஹிட்டானதால் அங்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அக்ஷய்குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகிறது. 'எனிபடி கேன் டான்ஸ்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்கு தலா ஒரு படங்கள் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக நீண்ட நாட்கள் மும்பையில் இருக்க வேண்டி உள்ளதால் அங்கு தங்குவதற்கு வீடு பார்க்கிறார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நடப்பதாக இருந்த திருமணம் நின்றுபோனது. இருவரும் காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதுவும் பிரபுதேவா மும்பை குடிபெயர்வதற்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது.

இதுபற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் மும்பையில் தங்க முடிவு செய்து இருப்பது உண்மைதான். அங்கு இது வரை வீடு எதுவும் வாங்கவில்லை. விரைவில் வாங்குவேன். மும்பையிலேயே நிரந்தரமாக தங்கி விடமாட்டேன். சென்னையை விட்டு நான் எங்கே போக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிக்கிறேனா?!!!

Tuesday, ,May, ,15, 2012
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்Õ படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே... யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும்வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான். ‘போடா போடிÕ படம், பெரும்பகுதி முடிந்துவிட்டது.

பாடல் மற்றும் சில விடுபட்ட காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளது. அடுத்து ‘வாலுÕ படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். ‘வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.

கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday, ,May, ,15, 2012
அறிவழகன் இயக்கத்தில் நகுல் நடிக்கும் Ôவல்லினம்Õ படத்தில் கூடைபந்து கோச்சாக வில்லன் நடிகர் அதுல் குல்கர்னி நடிக்கிறார்.

ராஜேஷ் இயக்கும் Ôஆல் இன் ஆல் அழகுராஜாÕ படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க பேச்சு நடக்கிறது.

சினேகா,பிரசன்னா வழங்கிய திருமண சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் சூர்யா,ஜோதிகா, ஜெயம் ரவி,ஆர்த்தி, அப்பாஸ்,எரும் ஜோடிகளும், மீனா, சிம்ரன், மணிரத்னம், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

அஜய் தேவ்கன், சல்மான் நடிக்கும் 2 இந்தி படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ள பிரபுதேவா சொந்தமாக மும்பையில் வீடு வாங்க முடிவு செய்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஜெசிகா சிம்சன் தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை ரூ.4 கோடிக்கு அமெரிக்க பத்திரிகையொன்றுக்கு விற்றிருக்கிறார். ஏற்கனவே ஜெனிபர் லோபஸ் தனது இரட்டை குழந்தை படத்தை ரூ.32 கோடிக்கு விற்றார்.

*‘நண்பன்’ படத்தையடுத்து ஷங்கர் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பதில் மூழ்கி இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் ஸ்கிரிப்ட் முடிந்தபிறகே இறுதி முடிவு எடுப்பாராம் ஷங்கர்.

*‘வால்மீகி’, ‘அய்யனார்’ படத்தில் நடித்துள்ள மீரா நந்தன் அடுத்து தெலுங்கில் அறிமுகமாகும் ‘ஜித்தன்’ ரமேஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

*பாலிவுட்டில் தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கும் ‘மரியன்’ படத்திற்கு 2 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து தர, அதன் ஷூட்டிங் ஆப்ரிக்காவில் நடக்கிறது.

*குழந்தை தொழிலாளர் பற்றிய படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் சத்யராஜ் மகள் திவ்யா.

*ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கும் ‘முகமூடி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை காரைக்காலில் படமாக்குகிறார் மிஷ்கின்.

என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு!!!

Tuesday, ,May, ,15, 2012
என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார். அவர் கூறியதாவது: 4 வயது முதலே நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்டுடியோவை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்றுதான் வாழ்க்கை கழிந்தது. நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன். என் மகள் ஜானவி, குஷி இருவரையும் பள்ளிக்கு அழைத்து சென்று விடும்போதும் அவர்கள் ‘மம்மிÕ என்று என்னை அழைத்தபோதும் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாது. அந்த தருணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் சின¤மாவிலிருந்து விலகியே இருந்தேன். கடவுள் பக்தி,

பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன். ‘ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி ந¤ச்சயம் நடிக்க வரமாட்டார்.

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு!!!


Tuesday, ,May, ,15, 2012
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் என்றாலே ஒளிந்து கொள்ளும் நயன்தாரா, இப்போது கூப்பிட்டுப் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டியொன்றில், "சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு சம்பாதித்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம்.

நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்," என்றார்.

நேபாள விமான விபத்தில் சோகம் : பிரபல குழந்தை நடிகையும் பலி!!!

Tuesday, ,May, ,15, 2012
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமன்றி, தமிழில் அறிமுகமான குழந்தை நட்சத்திர நடிகையும் அவருடைய அம்மாவும் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உள்பட விபத்தில் மரணம் அடைந்த 15 இந்தியர்களின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவன விமானம், பொகாராவில் இருந்து நேற்று காலை ஜோம்சாம் விமான நிலையத்துக்கு சென்றது. அங்கு விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மலை உச்சியில் மோதி கீழே விழுந்தது. இதில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் இறந்தனர். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீகாந்த், மனைவி லதா, மகள்கள் ஸ்ரீவர்த்தினி (9), ஸ்ரீபதா (6) ஆகியோர் சுற்றுலா சென்றனர். மேலும், கும்பகோணத்தை சேர்ந்த ஆன்மீக குழுவினரும் நேபாளம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற விமானம்தான் விபத்தில் சிக்கி நொறுங்கி உள்ளது. இதில் லதா, ஆன்மீக குழுவை சேர்ந்த அர்ச்சகர் சுதர்சன் பட்டாச்சாரியார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீகாந்த் உள்பட மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த தகவல் லதாவின் மாமனார் சீனிவாசனுக்கும், சுதர்சன் பட்டாச்சாரியாரின் சகோதரர் சவுந்தர்ராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான விபத்தில் தமிழ் நடிகை ஒருவரும் இறந்தது தற்போது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வெற்றிச்செல்வன்Õ. இப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி.

மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் ‘வெள்ளி நட்சத்திரம்Õ, ‘சத்யம்Õ படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிச்செல்வன் படத்தின் ஹீரோயின் ராதிகா ஆப்தேவுடன் தருணி நடித்த காட்சிகள் சமீபத்தில் ஊட்டியில் படமானது. வரும் 25ம் தேதி மீண்டும் சென்னையில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் தருணி. இதற்கிடையில் நேபாளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்றார். அப்போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். தருணி இறந்த தகவலை வெற்றிச்செல்வன் பட இயக்குனர் ருத்ரனுக்கு, தருணியை அறிமுகம் செய்து வைத்த கோ ஆர்டினேட்டர் ருக்மணி என்பவர் இன்று காலை தெரிவித்தார். அதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். தருணி இறந்தது பற்றி இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார். ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்தியில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பாÕ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். ஷூட்டிங்கில் எந்த இடையூறும் செய்ய மாட்டார். சொன்ன நேரத்துக்கு ரெடியாகி வந்துவிடுவார். பூண்டு சேர்க்காமல் உணவு கொடுங்கள் என்று மட்டும் கேட்பார். மற்றபடி இதுவேண்டும், அதுவேண்டும் என்று பந்தா செய்ய மாட்டார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் காஸ்ட்யூம் ஒன்றை விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார்.

அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. ‘25ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள்Õ என்று கூறினார். இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. ஷூட்டிங் ஏற்பாடுகள் செய்து வந்தேன். இந்நிலையில்தான் தருணியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கோ ஆர்டினேட்டர் இன்று காலை எனக்கு போன் செய்து விமான விபத்தில் தருணியும் அவரது அம்மாவும் இறந்தது பற்றி தகவல் தெரிவித்தார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலை யில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு ருத்ரன் கூறினார். குழந்தை நட்சத்திரமான தருணி விமான விபத்தில் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கு விரைந்துள்ளனர். உடல்களை சென்னை கொண்டுவர நடவடிக்கை நேபாள விமான விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த லதா, கும்பகோணத்தை சேர்ந்த சுதர்சன் பட்டாச்சாரியார், குழந்தை நட்சத்திரம் தருணி, அவருடைய அம்மா ஆகிய 4 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவிர விபத்தில் இறந்த மற்ற இந்தியர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு உடல்களை அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!!!

Tuesday, ,May, ,15, 2012
துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் குலதெய்வ கோயிலில் பிரசன்னா - சினேகா!!!

Tuesday, ,May, ,15, 2012
தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.

கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம்தான் பிரசன்னாவின் பூர்வீகம். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். முக்கிய காரியங்கள் செய்யும் முன் இங்கு வருவது அவர் வழக்கமாம்.

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு சென்னை திரும்பினர். அப்புறம்தான் தனிக்குடித்தனம் போனார்களாம்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்தக் கோயிலுக்குப் போய் வந்தபிறகுதான் நான் எந்த விஷயத்தையும் தொடங்குவேன். அது ரொம்ப நாள் சென்டிமென்ட். இப்போதும் நானும் சினேகாவும் எங்கள் வாழ்க்கையை எங்கள் குல தெய்வ ஆசியுடன் தொடங்குகிறோம்," என்றார்.

அஜீத் அடுத்த படம் - ஆர்யா- நயன் - டாப்ஸியுடன் இணைகிறார்: மே 31-ல் படப்பிடிப்பு!!!

Tuesday, ,May, ,15, 2012
தன் அடுத்த படம் யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்.

ஏ எம் ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

முதல் முறையாக இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைகிறார் ஆர்யா.

அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாராவும், ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், "வெற்றிப் பட கூட்டணியான அஜீத் - விஷ்ணுவர்தன்-யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர்.

கதை திரைக்கதையை விஷ்ணுவர்தனுடன் இணைந்து எழுதியுள்ளனர் எழுத்தாளர்கள் சுபா. பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சுபா வசனம் எழுதுகிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மே 31-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் முடிந்த பிறகு, விஜயா நிறுவனத்தின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.

கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு!- கே.எஸ். ரவிக்குமார் தகவல்!!!

Tuesday, ,May, ,15, 2012
ரஜினியின் கோச்சடையான் படத்தில், மறைந்த நடிகர் நாகேஷ் 'நடிக்கிறார்.' அனிமேஷன் முறையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ராணாவில், வடிவேலு மற்றும் விவேக் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்தார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஜினிக்கு மாமாவாக ஒரு காமெடி கேரக்டர் வருகிறது கோச்சடையானில். அதில் சந்தானம் போன்ற நடிகர்கள் நடித்தால் சரியாக வராது... வாடா போடா என்று கூப்பிட முடியாது என்பதால், மறைந்த நாகேஷை அனிமேஷனில் மீண்டும் உருவாக்கியிருக்கிறோம். கஷ்டமான காட்சி என்றாலும், மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கி வருகிறார்கள் சௌந்தர்யா குழுவினர்.

ராணாவில் வடிவேலு, விவேக் என பெரிய காமெடியன்கள் உள்ளனர். அதற்கு நிகராக வரவேண்டும் என்பதால் கோச்சடையானில் இப்படிச் செய்திருக்கிறோம்," என்றார்.

ஓகே ஓகே, கலகலப்பு.... பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!!!

Tuesday, ,May, ,15, 2012
தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எங்கு திரும்பினாலும் காமெடி படங்களாகவே இருக்கும் போலிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தியேட்டருக்கு வந்து அதிகம்பேர் பார்த்த படம் என்ற வகையில், சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அருகில் வந்துவிட்டது (முதலிடம் எந்திரன்தான்!).

6 வாரங்களாகியும் திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஓகேஓகே.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பு - மசாலா கபேயும் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது பாக்ஸ் ஆபீஸில். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் இந்தப் படம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலுமே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று மற்ற படங்களைவிட, காமெடி படங்களைத்தான் மக்கள் தியேட்டரில் வந்து அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

விளைவு, சுந்தர் சி, ராஜேஷ் எம், சற்குணம் ஆகிய இயக்குநர்களை நாடும் தயாரிப்பாளர்கள், 'நல்ல காமெடியா எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க பாஸ்' என கேட்க ஆரம்பித்துள்ளார்களாம்.

சினிமா எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு உள்ள ஏவிஎம் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள், சின்ன பட்ஜெட்டில் காமெடி படம் முயற்சிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ட்ரெண்டில், சந்தானம் காட்டில்தான் பேய் மழை. இதற்கு முன் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு பெரிய சம்பளத்துக்கு அவர் தாவிவிட, இன்னொரு சந்தானத்தை உருவாக்கிட்டா போச்சு என, அடுத்த கட்ட காமெடியன்களைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் முன்னணி இயக்குநர்கள்.

இவர்களின் சாய்ஸ் இப்போது பரோட்டா சூரிதான். டைமிங் காமெடி மற்றும் வடிவேலு மாதிரி உடல்மொழி உள்ள நடிகர் என்பதால் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள்.

இன்னொரு பக்கம் புதிய காமெடி நடிகர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர் பிரபல இயக்குநர்கள்.

எப்படியோ மக்களைச் சிரிக்க வைத்தால் சரி!

யாருடனும் ஈகோ இல்லை : சாந்தனு!!!

Tuesday, ,May, ,15, 2012
யாருடனும் ஈகோ இல்லை என்று சாந்தனு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது ‘அமளி துமளி’ படத்தில் நடித்து வருகிறேன். நான், நகுல், சுவாதி ஆகியோருக்கு இடையேயான பிரச்னைதான் படம். கதையை விட மூவரின் கேரக்டர்கள்தான் பேசப்படுவதாக இருக்கும். சிறப்பான கேரக்டர் இது. இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. யாருடனும் ஈகோவும் இல்லை. இனி சினிமா பார்க்க வருபவர்கள் மல்டி ஸ்டார் படத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் யாருடனும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.

Monday, May 14, 2012

ஷங்கரின் அடுத்த டார்கெட் 'ஓட்டுக்கு பணம்' - தலைப்பு 'தேர்தல்!!!

Monday, May, 14, 2012
கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது... பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!

விக்ரம் - பிசி ஸ்ரீராம் - ஏ ஆர் ரஹ்மான் என மீண்டும் ஒரு மெகா கூட்டணியோடு ஆரம்பிக்கும் தன் அடுத்த படத்தின் கதைக் களம் 'ஓட்டுக்குப் பணம்' என்பதுதான்.

இந்தப் பின்னணியில் ஆக்ஷன் - காதல் - காமெடி என்ற கட்டமைப்பில் திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர் எழுத்தாளர்கள் சுபா.

படத்தின் தலைப்பு 'தேர்தல்!'

பாலிவுட்டிலிருந்து ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஒருவரை இந்தப் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். அசினுடனும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். ஆனால் இன்னமும் இறுதியாகவில்லையாம்.

யாராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் எக்கச்சக்க பணம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்!

எனது படங்களில் தாய் தலையீடு இல்லை: ராதா மகள் கார்த்திகா!!!

Monday, May, 14, 2012
நடிகை ராதா மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலில் கார்த்திகா நடித்த 'கோ' படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். படப்பிடிப்பில் ராதா தலையீடு இருப்பதாக கிசுகிசு பரவியது.

சூட்டிங்கில் மகளுடன் ஆஜராகி கவர்ச்சியாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுவதாகவும் கூறப்பட்டது. ராதாவின் அறிவுரைப்படியே கார்த்திகா கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும் கூறினர்.

இது குறித்து கார்த்திகாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

எனது விஷயங்களிலும் நடிப்பிலும் என் தாய் ராதா தலையிடுவது இல்லை. படப்பிடிப்புக்கு சென்றதுமே நான் இயக்குனரின் குழந்தையாகி விடுகிறேன். அவர் சொல்கிறபடியே நடிக்கிறேன். எனது தாய் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். 150 படங்களில் நடித்துள்ளார். கடின உழைப்பால் முன்னுக்கு வந்தார். உச்சத்தில் இருக்கும்போதே குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். என் தாய்க்கு திரையுலகில் இப்போதும் மரியாதை இருக்கிறது.

இவ்வாறு கார்த்திகா கூறினார்.

ராதாவும், கார்த்திகா பட விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்று மறுத்தார். அவர் கூறும்போது,

சினிமா முன்பு போல் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இளம் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு பற்றிய எல்லா விஷயங்களும் தெரிகிறது. சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள். எனது மகள் கார்த்திகாவும் நிச்சயம் சாதிப்பார் என்றார்.

Sunday, May 13, 2012

விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் சினேகா இயக்குவதாக இருந்தது. பின்னர் நடிகர் விஜய் தயாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. விக்ரம் பிரபு, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந¢தபோது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினாராம். இதனால் இயக்குனர் சினேகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாற்றங்களை செய்தார்.

ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகளிடம் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையில் கதை, காட்சியில் திடீர் மாற்றம் செய்துள்ளது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நட்சத்திரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்திரசேகரன் கூறும் மாற்றங்கள் ரீமேக் ஆகவுள்ள படத்துக்கு பிளஸ்ஸாக இருக்குமா அல்லது இப்போதுள்ள கதையை கெடுத்துவிடுமா என்ற சந்தேகம் பட குழுவினர் மத்தியில் எழுந்துளளது. கோலிவுட்டில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் குதித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஸ்கிரிப்ட் மாற்றத்தால் பலன் இருக்கமா என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகும் சந்திரசேகரன், இந்த காட்சியை இது போல் படமாக்க வேண்டும் என உத்தரவிடுகிறாராம். இயக்குனரின் வேலையில் அவர் தலையீடுவதால் இயக்குனர் சினேகா வருத்தத்தில் இருக்கிறாராம்.

மார்க்கெட் காலியானதால் ஸ்ரேயாவுக்கு சம்பளம் கட்!!!

Sunday, ,May, ,13, 2012
பெங்களூர்: கன்னட படத்துக்காக சம்பளத்தை குறைத்து நடிக்கிறார் ஸ்ரேயா. கன்னடத்தில் திவ்யா நடிக்க மறுத்த படம் ‘சந்திரா. ரூபா அய்யர் இயக்குகிறார். இப்படத்தில் தற்போது ஸ்ரேயா நடிக்கிறார். மார்க்கெட் இழந்துவிட்டதாலும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் குறைந்த சம்பளத்தில் ஸ்ரேயா நடிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயா கூறும்போது,‘சமீபகாலமாகவே கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. பிற மொழி படங்களில் பிஸியாக இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இம்முறை சூழ்நிலை சரியாக அமைந்ததால் ஒப்புக்கொண்டேன். இளவரசி வேடம் என்பதால் அதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். மற்றொரு நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறேன் என்பது பெரிய விஷயம் இல்லை. அதுபோல் பல படங்களில் நடந்திருக்கிறது. கன்னடத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிப்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்கிறேன். இதற்கு மேல் இதுபற்றி என்ன சொல்ல வேண்டும்?ÕÕ என்றார்.
ஏற்கனவே இப்படத்துக்கு அமிர்தா ராவ், ஆண்டிரிட்டா ராய் ஆகிய நடிகைகளை நடிக்க வைக்கவும் இயக்குனர் ரூபா அய்யர் அணுகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் முதல் ஹிட் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் படம் ரிலீசான முதல் நாளில் ஆந்திராவில் மட்டும் ரூ. 8 கோடி 25 லட்சம் வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இதனால் ஸ்ருதி ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் இனியும் அதைத் தொடர முடியாது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஸ்ருதி தான் ராசியானவள் என்பதை நிரூபித்துவிட்டார்.

இந்த கப்பார் சிங் வேறு யாருமில்லை இந்தியில் சல்மான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் ரீமேக் தான். எது எப்படியோ, தபாங் எப்படி சோனாக்ஷிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேபோன்று ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

வாழ்த்துக்கள் ஸ்ருதி...

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகளுடன் செல்லும் ஐஸ்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் 16ம் தேதி பிரான்சில் துவங்குகிறது. இதி்ல் பிரசவத்திற்கு பிறகு கேமராக்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் இதுவரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்திருக்கும் தனது 6 மாத குழந்தை ஆரத்யாவுடன் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்புடையது. பிரபல அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்வது இது 11வது முறையாகும்.

மேலும் அதே லாரியலின் இன்னொரு பிராண்ட் அம்பாசிடரான சோனம் கபூரும் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்கிறார். இவர்கள் தவிர பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரசவத்திற்கு பிறகு ஓவர் வெயிட் போட்டுவிட்டார் என்று கூறப்படும் ஐஸ் கலந்து கொள்ளும் முதல் விழா இது. ஒவ்வொரு முறை கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும்போதும் அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் சரியில்லை என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. இந்த முறையாவது ஐஸ் நச்சுன்னு வருவாரா?

எடையைக் குறைக்க அமெரிக்கா பறந்த ஹன்சிகா!!!

Sunday, ,May, ,13, 2012
நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம்.

கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது. சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம். ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே ஓ, அந்த கொழுக், மொழுக் நடிகை தானே என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று வைக்க இவர் மட்டும் கொஞ்சம் வெயிட்டாகத் தான் இருக்கிறார். இந்நிலையில் யார், என்ன சொன்னார்களோ தெரியவில்லை கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று பெயர் வாங்கிய அவர் பிளைட்டைப் பிடித்து அமெரிக்கா சென்றுவிட்டாராம்.

அங்கு உடல் எடையைக் குறைத்து சிலிம்மான பிறகு நாடு திரும்புவாராம். உடம்பைக் குறைப்பது நல்ல ஐடியா தான் ஆனால் அதற்கு எதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும். இங்கில்லாத வசதியா என்ன.

அதென்ன நடிகைகள் எல்லாம் உடம்பைக் குறைக்கணும் என்றாலே அமெரிக்கா பறந்துவிடுகிறார்கள்.

'கோச்சடையான்' ஷூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் ஹாங்காங் பயணம்!!!

Sunday, ,May, ,13, 2012
மீனம்பாக்கம்::நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை திடீர் பயணமாக ஹாங்காங் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், இன்று ஹாங்காங் புறப்பட்டு சென்றார். விமானத்தில் பயணம் செய்வதற்காக அதிகாலை 2.30 மணிக்கு பாதுகாப்பு சோதனையை ரஜினி, மேற்கொண்டிருந்தபோதுதான், அவரது பயணம் பற்றிய விவரம் தெரியவந்தது. பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்ததும், விமானத்தில் ஏறி ஹாங்காங் புறப்பட்டு சென்றார். தற்போது, நடந்து வரும் Ôகோச்சடையான்Õ பட ஷூட்டிங்கிற்காக அவர், ஹாங்காங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, படப்பிடிப்பு குழுவினர் ஹாங்காங்கில் இருப்பதாக தெரிகிறது. 4 அல்லது 5 நாட்கள் அங்கு இருந்து விட்டு அவர் சென்னைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி சென்றபோது, சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர்கள் கூட்டம் நள்ளிரவிலும் அலை மோதியது. அதனால், இந்த முறை அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

3 பட விவகாரம் சம்பந்தி என்பதால் ரஜினி பேரை இழுப்பதா? கஸ்தூரிராஜா கண்டனம்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::ரஜினி சம்பந்தி என்பதால் 3 படத்திற்கு அவர் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்பதா? என கஸ்தூரிராஜா கண்டனம் தெரிவித்தார். தனுஷ் நடிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் ‘3. இப்படம் வாங்கி நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், ரஜினி மகள், மருமகன் என்பதால் படத்தை வாங்கினேன். இதில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி தர வேண்டும் என்றும் தெலுங்கு பட அதிபர் நட்டிகுமார் கூறி இருந்தார். இதையடுத்து, ‘தனக்கும் 3 படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே ரஜினி ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்தநிலையில் ‘3 பட தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா நேற்று கூறியதாவது: 3 படத்தை வாங்கச் சொல்லி யாரையும் நான் வற்புறுத்தவில்லை. வினியோகஸ்தர்கள் விருப்பப்பட்டுதான் வாங்கினார்கள். தெலுங்கு டப்பிங் உரிமையை நட்டி குமார் என்பவர் 4.35 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டார். ஆனால் 2.50 கோடிதான் கொடுத்தார். மீதி 1.85 கோடி தர வேண்டும். அதை நான் திருப்பிகேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வருகிறார். இப்படத்தை நான்தான் தயாரித்தேன். ஐஸ்வர்யா ஒரு டெக்னீஷியன், தனுஷ் நடிகர் அவ்வளவுதான். அவர்களுக்கு தயாரிப்பில் சம்பந்தம் கிடையாது. ரஜினி எங்கோ உச்சத்தில் இருக்கிறார். அவர் 3 பட நஷ்டத்தை தரவேண்டும் என்று நட்டி குமார் கூறுகிறார். ரஜினி எனக்கு சம்பந்தி என்பதால் அவர் பெயரை இழுப்பது தவறு. எதுவாக இருந்தாலும் நட்டி குமார் என்னிடம்தான் பேச வேண்டும். லாபம் வந்தால் எந்த வினியோகஸ்தரும் பங்கு கொடுப்பது கிடையாது. நஷ்டம் வந்தால் அதை தயாரிப்பாளரிடம் கேட்பது சரி கிடையாது.

தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்!!!

Sunday, ,May, ,13, 2012
சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாவிட்டால் படமே ஓடாது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து பின்னர் அந்த காதாநாயகர்களுக்கே அம்மாவாக நடித்தவர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழகான அம்மா, அழுது அழுது ஆர்பாட்டம் பண்ணும் அம்மா, வில்லத்தனமான அம்மா என பலவித அம்மாக்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் கோலோச்சி வருகின்றனர். அவர்களைப் பற்றி அன்னையர் தின ஸ்பெசலாக ஒரு ரவுண்ட் அப்.

அழுகை வடிவுக்கரசி

அம்மா என்றால் பிள்ளைகளை நினைத்து அழுதபடியேதான் இருப்பார் என்பதாக உள்ளார் வடிவுக்கரசி. இவர் சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெரும்பாலான தொடர்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வரும் திருமதி செல்வம் நெடுந்தொடரில் அழுது பிழியும் அம்மாவாக வரும் வடிவுக்கரசி தனது மூன்று மகள்களின் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே இருக்கிறார். அதே சமயம் தனது மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே வரும் பெண் என்று தெரிந்த உடன் ஆக்ரோசமாக பெருக்குமாறினால் வெளுத்து வாங்குகிறார்.

அதே வடிவுக்கரசிதான் அமைதியாக எதையும் பொறுமையாக கையாளும் அம்மாவாக உதிரிப்பூக்கள் தொடரில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல விசயம் இதில் அவ்வளவாக அழுவதில்லை. அதற்கு பதிலாக தொடரில் மூன்று குழந்தைகளின் அப்பாவாக நடித்துள்ள சேத்தன் அழுகிறார்.

திருமதி செல்வம் பாக்கியம்

அதே தொடரில் பாக்கியமாக வரும் இன்னொரு அம்மா தனது மகன், மகளுக்கு மட்டும் சுயநலமாக நடந்து கொண்டு வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். அவரேதான் தியாகம் தொடரில் மூன்று பெண்குழந்தைகளுக்கு பாசக்கார அம்மாவாக, பெண்ணின் திருமணத்தை எண்ணி அழும் அம்மாவாக நடித்திருக்கிறார்.

முத்தாரம் சத்ய பிரியா

நடிகை சத்யப்பிரியா கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மாவாக நடித்தவர். எப்பொழுது பார்த்தாலும் அதில் அவருக்கு அழுகைக்கு பஞ்சம் இருக்காது. அதே சத்யப்பிரியா முத்தாரம் தொடரில் தேவயானியின் மாமியாராக வருகிறார். முதலில் பிடிக்காத மருமகளாக இருந்த தேவயானி இப்பொழுது சத்யப்பிரியாவின் பாசக்கார மருமகளாக மாறியிருக்கிறார்.

நளினி நடிக்கும் தொடர்கள்

சுதா சந்திரன்

சன், கலைஞர், ஜெயா என சுதாசந்திரன் தொடர்களில் நடித்தாலும் தென்றல் தொடரில் வில்லத்தனமான அம்மாவாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். இந்த கதாபாத்திரம் அவருக்கு புதிது. ஏனெனில் பொண்டாட்டி தேவை என்ற காமெடி சீரியலில் அம்மாவாக நடித்த அனுபவம் மட்டுமே இருந்தது. இப்பொழுது வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். போகப்போகத்தான் தெரியும் அவரது ஆற்றல்.

கஸ்தூரி லதா

நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கஸ்தூரி தொடரில் அப்பாவி அம்மாவாக வரும் லதா பாவம் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியான கதாபாத்திரம் அவருக்கு இந்த தொடரில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

செல்லமே ராதிகா

செல்லமே சீரியலில் வரும் ராதிகா காணமல் போன தனது குழந்தையை பற்றி நினைக்கும் போது மட்டும் அவ்வப்போது கண் கலங்குகிறார். இதில் பாசமான அம்மா என்பதை விட பாசக்கார தங்கையாகவே அண்ணன் ராதாரவிக்காக அவர் அதிகம் அழுகிறார்.

ஆண்பாவம் மீரா

நான்கு ஆண் பிள்ளைகளின் பாசக்கார அம்மாவாக நடித்துள்ள மீரா மருமகளை பிடிக்காத மாமியாராகவும் வெளுத்து வாங்குகிறார். இந்த தொடர்களில் வரும் அம்மாக்களைப் பார்த்தால் அம்மா என்றாலே ஒன்று அழுபவராக இருக்க வேண்டும். இல்லையெனில் மருமகளுக்கு பிடிக்காத மாமியாராக இருக்கவேண்டும் அல்லது சுயநலமியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இனிமேலாவது புதிதாக சீரியல் இயக்கும் இயக்குநர்கள் அம்மாக்களின் அழுகையை நிறுத்துவார்களா?