திருமணம் முடிந்த பிறகும் சர்ச்சையை கிளப்பிய சமந்தாவின் ஆடை!

திருமணம் முடிந்த பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார். அதற்கே பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிப்பார்கள்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவர உள்ள 'ஓ பேபி' பட நிகழ்ச்சி ஒன்றில் அவர் அணிந்து வந்த ஆடை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா, சிகப்பு நிறத்தில் நீளமான கவுன் ஒன்றை அணிந்து வந்தார். ஆனால், மேற்புறத்தில் கழுத்துக்குக் கீழ் நீளமான கட் இருந்ததால் அந்த உடை ஆபாசமாகத் தெரிந்தது.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய அம்மாவும் கலந்து கொண்டார். மேலும் படத்தைத் தயாரித்தது அவரது கணவரான நாகசைதன்யாவின் அம்மா குடும்பத்தினர். அதனால், நாகசைதன்யாவின் மாமா வெங்கடேஷ், மற்றொரு மாமா மகன் ராணா டகுபட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் உறவினர்களுடன் கலந்து கொள்ளும் போது இப்படிப்பட்ட கிளாமரான ஆடையை அணிந்ததை சமந்தா தவிர்த்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், மற்றொரு சாரார் இந்தக் காலப் பெண்களைப் போல இருப்பதற்காக சமந்தா இப்படி நடந்து கொள்கிறார் என்றும், வேறு சிலரோ, இந்தக் கால பேஷனை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார் சமந்தா என்றும் பாராட்டுகிறார்கள். 


Comments