ஜோதிகாவின் 'ராட்சசி' படம் நாளை மறுநாள்! 'ஜாக்பாட்' படமும் ரெடி!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் '36 வயதினிலே' படம் மூலம் மீண்டும் நாயகியாக நடிக்க வந்தார். தொடர்ந்து 'மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்தார்.

அதன்பின் ஒரே சமயத்தில் 'ராட்சசி, ஜாக்பாட்' ஆகிய படங்களில் நடித்து வந்தார். இவற்றில் 'ராட்சசி' படம் நாளை மறுநாள் ஜுலை 5ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'ஜாக்பாட்' படத்திற்கும் தணிக்கை முடிந்து 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் 'ஜாக்பாட்' படத்தை இயக்கியுள்ளார். ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோதிகா அடுத்து ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Comments