அடுத்தக் கட்டமாக தலைநகருக்கு செல்லும் பிகில்!

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'பிகில்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். அதோடு தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் என்னும் தயாரிப்பு நிறுவனம் தயா
ரிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் போடப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்னும் சில தினங்களில் பிகில் திரைப்பட குழு இந்திய தலைநகரான புதுதில்லிக்கு செல்வார்கள் என தெரிகிறது.

Comments