நடிகை அமலா பாலின் ஆடை இல்லாத ‘ஆடை’ படத்திற்கு ‘ஏ ‘சான்றிதழ்!

வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கி உள்ளார். தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை அமலாபாலை வைத்து இயக்கி
உள்ளார்.
படம் பற்றி ரத்னகுமார் கூறுகையில்ல, இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா / அலைபேசி தகவல்கள்) சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம்.
 
இது பற்றி அமலா பால் கூறுகையில், ‘ஆடை’ படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. ஆடை சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களின் ஆதங்கத்தையும், நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும் என்றார்.
 
படம் முடிந்து சென்சார் அதகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் ஏ சான்று வழங்கி உள்ளனர். நடிகைக்கு முக்கியத்துவமான இந்த படத்திற்கு ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

Comments