இந்திய அணியின் மகத்தான வெற்றி! இங்கிலாந்தில் கண்டு ரசித்த சிவகார்த்திகேயன் - அனிருத்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எல்லா போட்டிகளைக் காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் வெளிப்பட்டது.
இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருந்து சென்றனர். அதில், நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கியமானவர்கள்.
 
அவர்கள், போட்டியை காண இந்திய அணியின் ஜெர்சி உடையுடன் சென்றனர். மைதானத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் சிவகார்த்திகேயன், அனிருத். நேற்றைய போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது..

Comments