மகரிஷி கொடுத்த மகேஷ் பாபுவுக்கு: சாய் தன்ஷிகா!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகரிஷி படம் சூப்பர் டூப்பர் ஹிட் குடுத்து இருக்கு ஆந்திராவில். ஒரு வாரத்தின் வசூலே நினைச்சு பார்க்க முடியாத கோடிகள் என்கிறார்கள். மனதை வசீகரிக்கும், அமைதிப் படுத்தும் இந்த படத்தைப் பற்றித்தான் நம்ம சாய் தன்ஷிகா ட்வீட் செய்திருக்கார்.சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, சூப்பர் ஸ்டாருடன் கபாலி போன்ற வெற்றிப்

படங்களில் நடிச்சவர். தஞ்சையில் பிறந்த இவருக்கு தாய் மொழியும் தமிழ்தான்.இந்த மாதம் ஒன்பதாம் தேதி வெளியான மகேஷ் பாபுவின் தெலுங்கு படம் மகரிஷி பார்த்துவிட்டு, தன் மனதின் எண்ண ஓட்டங்களை தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.அதில், டெக்னாலஜி வளர வளர நாமும் அதில் மூழ்கிட்டோம். நம்மை சுத்தி இருக்கற வாழ்க்கையின் வேல்யூ தெரியாம போயிருச்சு. இதை மக்களுக்கு புரிய வைக்கும் படியா மகேஷ் பாபு நடிப்பில் வந்திருக்கும் மகரிஷி படம் இருக்கு.இதைத் தந்த மகேஷ் பாபுவுக்கு நன்றி என்று பதிவிட்டு இருக்கார். அத்துடன் தமது அண்மைய புகைப் படங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். தெலுங்கில் அனைவருக்கும் பிடித்த நடிகர் மகேஷ் பாபுவுக்கு மகரிஷி 25 வது படமாம்

Comments