அனைவருக்கும் தல அஜித் என்றால் மாஸ் ஹீரோ என்றும் கடின உழைப்பால் வெற்றி அடைந்தவர் என்றும் தெரியும். மேலும் ஒரு கூடுதல் தகவலாக, வான்மதி திரைப்படத்தின் கதாநாயகியான ஸ்வாதி அவர்களின் பேட்டி, அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நம் தல அஜித் ஒரு நல்ல திரைப்பட நடிகர், ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் மற்றும் யாருக்கும் தெரியாமல் உதவி செய்பவர் என்பது அனைவருக்கும் அறிந்த உண்மையே. அஜித் அவர்கள் தன் ஆரம்பகாலத்தில் ஸ்வாதியிடம் கூறியதை அவர் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் விஜய்க்கு பின்னணியில் அவரின் தந்தை உள்ளார், ஆனால் அவருக்கு யாரும் இல்லை , எனவே விஜய் விட தான் மிக கடினமாக உழைக்க வேண்டும் என்றும், தான் நடிக்கும் படம் வெற்றிக்கண்டால் மட்டுமே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையும் என்றும், நிச்சயம் ஒரு நாள் தான் பெரிய நடிகர் என்ற பெயர் எடுப்பார் என்றும் கூறினாராம் நம் தல அஜித். மேலும் ஸ்வாதி அவர்கள், தன் கருத்தை இவ்வாறு தெரிவித்தார் "நடிகர் விஜய் அவரின் தந்தை கனவை மட்டுமே பூர்த்தி செய்தார், ஆனால் நடிகர் அஜித் அவருடைய சொந்த கனவை அடைய போராடி வெற்றிகண்டவர்
மேலும் விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரு பெரும் வித்யாசம் உள்ளது, அது என்னவென்றால் நடிகர் விஜய் உதவி செய்தால் பிரபலமடைய அனைவரும் அறியும் வண்ணம் உதவுபவர், நடிகர் அஜித்தோ நேர்மறையாக ஒருவரும் அறியா வண்ணம் உதவி செய்வார் என்றெல்லாம் மனம் விட்டு பேட்டியளித்துள்ளார் நடிகை ஸ்வாதி. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த தகவலை share செய்து நடிகர் அஜித்தை மேலும் பெருமைப்படுத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment