ஓய் படத்தில் அறிமுகமான ஈஷா ரெப்பா: கிராமத்து பெண்ணாக!

தமிழில் 2016ல் வெளியான ஓய் என்ற படத்தில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. கீதன் பிரிட்டோ நாயகனாக நடித்த அந்த படத்தை பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்தார். அதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஈஷா ரெப்பா, தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், ஜி.வி.பிரகாஷ் உடன் நான் ஜோடி சேரும் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். அதுவும் கதைக்கு திருப்புமுனை தரும் வேடம். அதனால் தமிழில் முன்பு எனக்கு கிடைக்காத வெற்றி இந்த படத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஈஷா ரெப்பா.

Comments