அரசியல் களத்தில் அஜித்!

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு அடுத்ததாக அஜித் அரசியல் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அஜித் தற்போது நடித்து முடித்துள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார். அஜித், வினோத் இணையும் புதிய படத்தின் களம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது.

சமூகப் போராளி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.வழக்கமாக அரசியல் விஷயங்களில் அதிகமாக ஆர்வம் காட்டாத அஜித் இந்த முறைத் தானே விருப்பப்பட்டு அரசியல் களம் கொண்ட படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Comments