சாந்தனு வுக்கு ஜோடியான ‘பரியேறும் பெருமாள்’ நாயகி!

மத யானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம்” திரைப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகியாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகி கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிக்கும் கயல் ஆனந்தி ‘இராவண கோட்டம்’ படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அழகிய பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது’ என ட்வீட் செய்துள்ளார்.பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பின் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

Comments