ஆபாச 'வீடியோ' வெளியீடு : புகார் தர நடிகையர் தயக்கம்!!!

சினிமா பாடகி பெயரில் உள்ள, 'டுவிட்டர்' பக்கத்தில், நடிகர், நடிகையரின் அந்தரங்க, 'வீடியோ' காட்சிகள் தொடர்ந்து வெளியாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் தனுஷ் மீது, டுவிட்டரில், வெளிப்படையாக புகார் கூறியவர், சினிமா பின்னணி பாடகி சுசித்ரா. சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும்,

அவரது பெயரில் உள்ள மற்றொரு டுவிட்டர் பக்கத்தில், நடிகர், நடிகையரின் அந்தரங்க வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. இது, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'இந்த நடிகை யார் கண்டுபிடியுங்கள்' என, தலைப்பிட்டு வெளியாகும், ஒவ்வொரு வீடியோ மற்றும் படங்களால்,
 
டுவிட்டர் பக்கமே, ஆபாச தளமாக மாறி வருகிறது. இது தொடர்பாக, எந்த நடிகர், நடிகையும், காவல் நிலையத்தில் புகார் தரவில்லை. ஒரு சிலரை தவிர, வீடியோ மற்றும் படங்களில் உள்ளவர்கள் யாரும், எந்த விளக்கமும் தரவில்லை. இவ்விஷயத்தில், காவல் துறையே அதிரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக வலைதள பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

கைக்குள் ஆபாசம்: நடிகை ஊர்வசி : பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு, மொபைல் போன் தான் காரணம். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால், ஒவ்வொருவரின் கையிலும் ஆபாச படங்கள் உள்ளன. இதனால், உடல் பசி ஏற்பட்டு, அதை தணித்துக் கொள்ள குழந்தை, மூதாட்டி என, எதையும் பார்ப்பதில்லை. இணையதளத்தில் ஆபாச படங்களை தடுக்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், பாலியல் குற்றவாளிகளுக்கு, மற்றவர்கள் பயப்படும் அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
'தவறாக பயன்படுத்தப்படுகிறது' : கபாலி நாயகி தன்ஷிகா: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
 
அதிகரிப்பதற்கு, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதே காரணம். அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு, அரபு நாடுகள் போல் தண்டனை தர வேண்டும். பெண்கள், அவரவர் பாதுகாப்புக்கு குறைந்தபட்சம் தற்காப்பு கலை படிக்கலாம். குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களையும் வைத்துக் கொள்ளலாம். விரைவில், தற்காப்பு கலை பயிற்சி மையத்தை துவங்க திட்டமிட்டு உள்ளேன்.

Comments