வளரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்வது சகஜம்: கீர்த்தி சுரேஷ்!!!

கீர்த்தி சுரேஷ் தமிழ்பட உலகில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார். அவரைப் பற்றி எழும் கிசு கிசு பற்றி அவரிடம் கேட்டபோது… வளர்ந்து வரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது சகஜம் ஆகிவிட்டது. இதுபோன்று ஆகிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். குறிப்பாக என்னுடன் நடிக்கும் அனைவரிடமும் உண்மையான நட்பு வளர்க்கிறேன்.

சகஜமாக பழகி வருகிறேன். அதனால் அவர்களும் என்னிடம் நல்ல நட்புடன் பழகுகிறார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவதால் என்னைப்பற்றி தவறான செய்திகள் வருவதில்லை.
 
எல்லாவற்றுக்கும் மேலாக நான் யாரிடமும் வெட்டியாக அரட்டை அடிப்பதில்லை. என் வேலையில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். மறுநாள் நடிக்க வேண்டிய காட்சிகளை முதல் நாளே கேட்டறிந்து ஒத்திகை பார்த்து விட்டு வருகிறேன். எனவே, படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நடிப்பை தவிர வேறு சிந்தனை எதுவும் கிடையாது. நடிப்பை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பேன். இது படப்பிடிப்பு தளத்துக்கு வரும் அனைவருக்கும் தெரியும். எனவே என்னைப்பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லை. இனியும் வராமல் பார்த்துக்கொள்வேன் என்றார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யா, மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது

Comments