ஜீவா மேலும் ஒரு புதிய படத்தில்!!!

Tuesday, November 3, 2015
Chennai:யான்’ படத்தின் தோல்வியால் துவண்டு போயுள்ள ஜீவா, தற்போது கதை தேர்வில் ரொம்ப கவனல் செலுத்தி வருகிறார். தற்போது ‘திருநாள்’ என்ற படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக நயந்தாரா நடிக்கிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

அதற்கிடையில், ஜீவா மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜெமினி கணேசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முத்துக்குமார் என்பவர் இயக்கும் இப்படத்தின் தலைப்பிற்காக, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின், குடும்பத்தினரிடம் முறையாக அனுமதியை படக்குழுவினர் பெற்றுள்ளனர்.
இப்படத்தின் நாயகி மற்றும் இதர விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Comments