எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் கடந்த மாதமே ரத்து செய்யப்பட்டு விட்டது: சரத்குமார் பல்டி!!!

20th of October 2015
சென்னை:நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்றதையடுத்து நேற்று முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். இதில் 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன் என்று கூறினார். 2004ல் ரு்.4.2 கோடியாக இருந்த நடிகர்  சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது. விஜயகாந்த் தலைவராக இருந்போது, கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது.

2007ல் கலைநிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.3 கோடி உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட சீனிவாஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தில் என்ன குறை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 29 ஆண்டு 11 மாதத்துக்கு நடிகர் சங்க நிலம் குத்தகைக்கு அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 
எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ள்ளதாகவும் சரத்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 29ம் தேதியே  ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமது பெயருக்கு ஏற்பட்ட கங்கத்தை போக்கவே ஒப்பந்தம் ரத்து  செய்யப்பட்டுள்ளதாகவும் சரத் குமார் தெரிவித்துள்ளார். தேவையற்ற குற்றச்சாட்டுகளால் தாம் புண்பட்டுள்ளதாக சரத்குமார் வேதனை  தெரிவித்துள்ளார்.

Comments