ஜெயசித்ரா மகனுக்கு கிடைத்த இரண்டு மிகப்பெரிய வாய்ப்புகள்!!!

24th of October 2015
சென்னை:முன்னாள் கதாநாயகியான ஜெயசித்ரா தனது மகன் அம்ரேஷ் என்பவரை ‘நானே என்னுள் இல்லை’ என்கிற படத்தில் கதாநாயகனாக ஆக்கினார் இல்லையா..? ஆனால் அவருக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்குள் இருக்கும் இசைஞானத்தை பயன்படுத்தி இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

அந்தவிதமாக தற்போது லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.. அதுமட்டுமல்ல, தற்போது சௌகார்பேட்டை’ படத்தை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் அடுத்ததாக, இந்தப்படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கே இயக்கவுள்ள ‘பொம்மி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் அம்ரேஷுக்கு கிடைத்துள்ளது.

Comments