அஜித்தைப் பற்றி தவறாக பேசினேனா? - நடிகர் கருணாஸ் விளக்கம்!!!

29th of October 2015
சென்னை:நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில், நாசர் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றார். 
இந்த நிலையில், தேர்தலில் நடிகர் அஜித் ஓட்டு போடாதது குறித்து, கருணாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தைப் பற்றி தரக்குறைவாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இதை மறுத்துள்ள கருணாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு தெரியாமல் யாரோ, இது போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் கருணாஸ் அளித்த விளக்கத்தில், “என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.
ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.
யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இது பற்றி நாளை கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.
என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments