தனி ஒருவன் படத்திற்காக இப்படியா செய்தார் அரவிந்த் சாமி? ஆச்சரியத்தில் படக்குழு!!!

6th of September 2015
சென்னை:தனி ஒருவன் என்ற ஒரே படத்தின் மூலம் தான் இத்தனை நாட்கள் விட்ட இடத்தை பிடித்து விட்டார் அரவிந்த் சாமி. இவர் இந்த கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அப்படி என்று சொன்னவுடன் வந்து நடிக்கவில்லை.
இக்கதாபாத்திரத்தை தன் மனதிற்குள் ஏற்றி, பல மாதங்கள் இதற்காக ஒத்திகை பார்த்துள்ளார். தன் நண்பர்கள், இயக்குனர் என பலரிடன் கருத்து கேட்டுள்ளார்

பிறகு அவரே சித்தார்த் அபிமன்யூவாக இயக்குனர் ராஜா முன் வந்துள்ளார். பல வளர்ந்து வரும் நடிகர்களே ஒத்திகை பார்க்கமால் பில்டப் கொடுக்கும் காலக்கட்டத்தில் இப்படி ஒரு சீனியர் நடிகரா? என்று படக்குழு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்களாம்.

Comments