நயன்தாரா திருமணத்தை அவருடன் நானே நடத்தி வைப்பேன் - சிம்பு அதிரடி!!!

20th of August 2015
சென்னை:சிம்பு சமீப காலமாக மிகவும் நிதானமாக தான் பேசுகிறார். நேற்று வாலு படத்தின் சக்சஸ் மீட் நடக்க, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவாக விடையளித்தார்.
 

இதில் நயன்தாரா காதல் பற்றி கேட்டதற்கு 'நாங்கள் இருவரும் கருத்து வேறுப்பாட்டால் பிரியவில்லை, அப்படி சண்டையிட்டு பிரிந்திருந்தால் எப்படி 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்திருக்க முடியும்.

மேலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா காதலிக்கிறார்களா என்று கேட்கிறார்கள், இருவரும் என் நண்பர்களே, அப்படி காதலித்தால் அவர்கள் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்' என்று கூறினார்.

Comments