தேடிப் பிடித்தாவது காதலிப்பேன்: ஆர்யா!!!

22nd of July 2015
சென்னை:ஆர்யாவிடமும் அதைத்தான் கேட்கிறார்கள், விஷாலிடமும் அதைத்தான் கேட்கிறார்கள்.

ஆர்யாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி, எப்போது கல்யாணம் என்பதாகவே இருக்ககும். அதேபோல் விஷாலை சந்தித்தாலும், ஆர்யாவுக்கு எப்போது கல்யாணம் என்றுதான் கேட்கிறார்கள்.


ஆனால், ஆர்யா ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். எப்போது திருமணம் செய்தாலும் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வது.

திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய மாட்டேன். எனக்குப் பொருத்தமான பெண்ணை தேடிக் கண்டுபிடித்தாவது காதலித்துதான் திருமணம் செய்வேன், என்னுடைய திருமணம் காதல் திருமணமாகதான் இருக்கும் என்றிருக்கிறார்.

ஏற்கனவே பொருத்தமானவரை கண்டடைந்திருப்பாரோ?

Comments