விஷாலை டம்மியாக்க பறவை முனியம்மாவுக்கு ரூ.5 லட்சம் உதவியா? : தனுஷ் விளக்கம்!!!

31st of July 2015
சென்னை:கிராமபுற பாடல்கள் பாடி, பிறகு சினிமாவிலும் ஒரு சில பாடல்களை பாடிய பறவை முனியம்மா, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், தற்போது பட வாய்ப்புகள் இன்றி, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிகக்பட்டிருந்த பறவை முனியம்மாவை வார பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தபோது, அவர் கஷ்ட்ட நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை சென்று பார்த்து நலம் விசாரித்த நடிகர் விஷால் அவருக்கு ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தார். மேலும் மாதம் மாதம் ரூ.5ஆயிரம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தல் போட்டி, மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் என்று பல விஷயங்களில் ஈடுபட்டு வரும் விஷால் பறவை முனியம்மாவுக்கு 5 ஆயிரம் கொடுத்து உதவி செய்தது குறித்து, அவரது ரசிகர்கள் செய்திகளை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பறவை முனியம்மாவை சந்தித்த தனுஷ் அவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார். தனுஷின் இந்த நடவடிக்கையால் விஷால் டம்மியாக்கபப்ட்டுள்லார்.

இப்படி கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஷால், வெறும் 5 ஆயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறாரே, ஆனால் தனுஷோ 5 லட்சம் கொடுத்திருக்கிறாரே, என்று தற்போது கோடம்பாக்க டீ கடைகள் மட்டும் இன்றி, அமெரிக்க டீ கடைகளான பேஸ்புக், வாட்ஸ்-அப் களிலும் இந்த கருத்து வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தனுஷிடம் இது குறித்து கேட்ட போது, "நான் அப்படி நினைத்து எதையும் செய்யவில்லை. பறவை முனியம்மா என்னுடன் நடித்திருக்கிறார். அவருடன் நான் நடித்த காலம் ரோம இனிமையானது. அவர் இந்த நிலையில் இருப்பதை அறிந்தவுடன் உதவி செய்தேன் அவ்வளவு தான்" என்று விளக்கம் அளித்தார்.

Comments