நானே 'விஐபி 2' படத்தை இயக்குகிறேன்: வேல்ராஜ்!!!

25th of July 2015
சென்னை:தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் 'விஐபி 2'. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அன்புச்செழியன் தயாரித்து வருகிறார்.
'வேலையில்லா பட்டதாரி' படக்குழு மீண்டும் இணைந்து இருப்பதால் 'விஐபி 2' என்று தற்போதைக்கு பெயரிட்டு இருக்கிறார்கள். இன்னும் படத்தின் பெயர் இறுதி செய்யப்படவில்லை.
 
விஐபி 2' படப்பிடிப்பின் போது 'பாயும் புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார். இதனால், 'விஐபி 2' படத்தை வேல்ராஜ் இயக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.
இச்செய்தி குறித்து வேல்ராஜ், "நான் தான் அந்தப் படத்தை இயக்குகிறேன். வரும் செய்திகள் வெறும் புரளியே. ’பாயும் புலி’ படமும், தனுஷ் படமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
 
ஒரு கட்டத்தில் 'பாயும் புலி' படப்பிடிப்பில் தொடர்ந்து சில நாட்கள் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தது. தனுஷ் படத்தில் நான் இயக்கத்தை மட்டும் கவனித்துக் கொள்வதால் ஒளிப்பதிவுக்கு நான் இருக்க வேண்டியதில்லை.
 
எனவே, நான் இல்லாமல் குழுவினர் சில மான்டேஜ் காட்சிகளை படமாக்கினர். இதனால் நான் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என அர்த்தமாகாது. இப்போது படப்பிடிப்பு முடிந்து விட்டது. மற்ற வேலைகள் நடந்து வருகிறது. நான் தான் இன்னும் தனுஷ் படத்தின் இயக்குநர்" என்று தெரிவித்தார்.

Comments