அரண்மனை 2, தூங்காவனம்: த்ரிஷாவின் 50வது படம் எது?!!!

28th of July 2015
சென்னை:கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த 'மெளனம் பேசியதே' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை த்ரிஷா கடந்த 13 வருடங்களாக கோலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். பொதுவாக கோலிவுட்டில் ஒரு நடிகை ஐந்து வருடங்கள் தாக்கு பிடிப்பதே கடினம் என்ற சூழ்நிலையில், 13 வருடங்களாக நாயகி வேடத்தை தக்க வைத்துக் கொள்வது மட்டுமின்றி

உலக நாயகன் கமல் போன்ற சீனியர் நடிகர்களுடனும், ஜெயம் ரவி போன்ற இளையதலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 31ஆம் தேதி வெளிவரவுள்ள 'சகலகலாவல்லன்' திரைப்படம் த்ரிஷாவின் 48வது படம் ஆகும். தற்போது அவர் அரண்மனை 2, தூங்காவனம், ஆகிய தமிழ் படங்களிலும் நாயகி, போகி, ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் அவர் நடித்து வரும் தூங்காவனம் மற்றும் அரண்மனை 2 ஆகிய படங்கள் வெகுவிரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய 50வது படம் இந்த இரண்டு படங்களில் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து த்ரிஷா கூறும்போது இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் இருப்பதால் இரண்டில் எது எனது 50வது படம் என்பதை தற்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

மேலும் த்ரிஷா தற்போது அபியும் நானும் கணேஷ் வெங்கட்ராமனுடன் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments