நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து ரசிகர்கள்: விஜய்!!!

1st of February 2015
சென்னை:விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் நேற்று நூறாவது நாளை எட்டியதும், இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த செய்தியும் நேற்று பரவலாக வெளிவந்தது. 
 இந்நிலையில் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கத்தி' யின் நூறாவது நாளுக்கு அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கத்தி' படத்திற்கு நீங்கள் கொடுத்த வெற்றிக்கு 'நன்றி' என்ற வார்த்தை மிகவும் சிறியது. நான் இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களில் மிகவும் மதிப்புடையதாக நான் கருதுவது என்னுடைய ரசிகர்கள் மட்டுமே' என்று தெரிவித்துள்ளார்.

Comments