கிரிக்கெட்டுக்காக நிர்வாண போஸ் கொடுப்பதாக அறிவித்த பூனம் பாண்டே நடிக்கும் ‘மைதிலி&கோ’!!!

6th of January 2015
சென்னை:கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது, இந்தியா வெற்றி பெற்றால், தான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே, தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘மைதிலி & கோ’. இப்படத்தின் மூலம் பூனம் பாண்டே, தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பாண்டியராஜன், சுமன், துப்பாக்கி படத்தின் வில்லன் ஜாகீர் உசேன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.


சி.ராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வேலுமணி வசனம் எழுதுகிறார். சினேகன், இந்து ஆகியோர் பாடல்கள் எழுத, பாப்ஜி கலை அமைக்கிறார். பிரேம்ரஷித் நடனம் அமைக்க, ரகு படத்தொகுப்பு செய்கிறார். மாஸ் மாதா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைத்து இயக்கும் வீரு.கே, படம் பற்றி கூறுகையில், “இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட படம். சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும். ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்த படம் தயாரிக்கப் பட்டுள்ளது.

நாயகியை மையப்படுத்தி  முழுக்க முழுக்க கதை உருவாகப்பட்டுள்ளது.

நாயகி இருக்கும் ஊரில் தீவிரவாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள், இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு  முழுவது அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.  மிக விரைவில் இந்த படம் உலகம் முழுவது வெளியாக உள்ளது.” என்றார்.

Comments