ஐ பட சம்பளத்தை தானம் செய்த விக்ரம்!!!

22nd of January 2015
சென்னை:விக்ரமின் கடின உழைப்பில் உருவான ஐ படம் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தில் விக்ரம் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே. ஐ படத்தில் தன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம்.

இந்நிலையில் ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம் விக்ரம்.

Comments