சந்தானம் நாசமாய் போக யாகம் நடத்தும் மகாசபா!!!

25th of January 2015
சென்னை:அகில இந்திய இந்து மகா சபை என்ற அமைப்பு நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது, அதில் தைத்திருநாள் அன்று திரைக்கு வந்த ஐ திரைப்படத்தில் விநாயகரை சந்தானம் இழிவு படுத்தி பேசியதாகவும் அதே நோய் சந்தானத்தை தாக்கி அவர் நாசமாய் போக வேண்டும் என்று யாகம் நடத்த போவதாகவும் அந்த யாகத்திற்கு அனைவரும் வாரீர் வாரீர் என்று போஸ்டர் அடித்துள்ளார்கள்.

ஆனால் இந்த யாகம் எங்கு எப்போது நடத்தப்படும் என்பதை மட்டும் குறிப்பிடப்படவில்லை. அப்படி என்ன சந்தானம் விநாயகரை பற்றி ஐ படத்தில் இழிவாக பேசினார் என்று புரியவே இல்லை. நோயால் பாதிக்கப்பட்ட சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரை பார்த்து என்ன புள்ளையார் மாதிரி இருந்த நீங்க, இப்ப விநாயகர் சதுர்த்திக்கு செய்த கொழுக்கட்டை மாதிரி உங்களுக்கு ஆங்காங்கே வீங்கியுள்ளது என்பார், இதில் என்ன இழிவு இருக்கிறது என்று தெரியவில்லை, மேலும் இதற்கு யாகம் வளர்க்கப்போகிறோம் என்று அகில இந்திய இந்து மகா சபை கூறியிருப்பது முட்டாள்தனமான செயல்.
 
படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அதை ஒரு மதகலவரம் போல பார்க்கக்கூடாது. அது எப்படி ஒரு படத்துல இருக்குற நல்ல விஷயத்தை எல்லாம் விட்டுட்டு அதுல இருக்குற எதாவது தேவையில்லாத மேட்டரை எடுத்து பிரச்சனை ஆக்குறாங்கனு தெரியல…இதுக்குனு பதினொரு பேர் கொண்ட குழு இருப்பாங்களோ ஒரு வேலை.

Comments