என்னை அறிந்தால் படத்தின் கதை குறித்து லண்டனில் கசிந்த உண்மை!!!

22nd of January 2015
சென்னை:என்னை அறிந்தால் படம் 29ம் தேதி வருமா? என்று பெரிய வாக்குவாதம் நடந்து வருகிறது. ஆனால், வெளி நாடுகளில் படத்தின் புக்கிங் ஓபன் ஆகி, டிக்கெட்டுகள் விற்க தொடங்கி விட்டனர்.
 
இந்நிலையில் லண்டனில் படத்தை பற்றிய முன்னோட்டத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் அஜித், சத்யா என்ற பெயரில் காவல்த்துறை அதிகாரியாக வலம் வருகிறார். அவர் லோக்கல் ரவுடிகளுக்கு எதிராக எடுக்கும் ஆக்‌ஷன் அவரின் வாழ்க்கையை திருப்பி போடுகிறது, இதை தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பதை யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமேக்ஸில் படம் முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments