படத்திற்கு யு/ஏ சான்று; 'என்னை அறிந்தால்' படக்குழு அதிர்ச்சி!!!

25th of January 2015
சென்னை:அஜீத் நடித்துள்ள, "என்னை அறிந்தால்" படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் "என்னை அறிந்தால்". அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தன. சமீபத்தில் அந்த பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்தில் சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் படத்திற்கு அந்தக்காட்சிகள் முக்கியம் என படக்குழு தெரிவிக்க இறுதியில் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று கொடுத்துள்ளனர்.

பொதுவாக 'யு' சான்று பெற்றால்தான் ஒரு படம் அரசு வரி விலக்குக்கு தகுதி பெற முடியும். ஆனால் என்னை அறிந்தால் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று கொடுத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இதனிடையே என்னை அறிந்தால் தயாரிப்பாளர், ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அங்கு யு சான்று பெற்று படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளார்.

Comments