வதந்தியை பரப்பாதீர்கள்! அனேகன் ரிலீஸ் உறுதி!!!

29th of January 2015
சென்னை:என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் வரும் 29 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் திரையுலகமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றில் அனேகன் படத்தின் ரிலீஸ் தேதியும் அடக்கம். 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.


இரண்டு வாரங்களுக்கு முன்பே பப்ளிசிட்டியை தொடங்கிவிட்டது அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ். சில வாரங்களுக்கு முன்பே தணிக்கைக்கு அனுப்பப்பட்ட அனேகன் படம் யு சான்றிதழ் பெற்றது. அதையடுத்து ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தை 29 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், அதற்கு அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் அனேகன் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காமல்போய்விடக்கூடிய நிலை உருவானது.

எனவே, அனேகன் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை மறுத்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, தயவுசெய்து அனேகன் படம் குறித்த தவறான செய்திகளை பரப்பாதீர்கள்.

படம் திட்டமிட்டபடி 13ஆம் தேதி வெளியாகும்! என ட்வீட் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களிலும், உலகம் முழுக்க 1000 தியேட்டர்களிலும் அனேகன் வெளியாகிறதாம்.
 
இது தவிர ஹிந்தி டப்பிங் 200 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம்.

Comments