'ஐ' திட்டமிட்டபடி வெளியாகும்; பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டது: தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்!!!

10th of January 2015
சென்னை:பிக்சர் ஹவுஸ் நிறுவனத்துடன் கடன் தொடர்பான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டது என்றும் அதனால் 'ஐ' திட்டமிட்டபடி வெளியாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் 'ஐ' படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சற்று முன்னர் கூறியுள்ளார்.

நேற்று சென்னை ஐகோர்ட் 'ஐ' படத்தை 3வார காலத்திற்கு தடை செய்தது. மேலும் பிக்சர் ஹவுஸ் மீடியாவின் மனுவுக்கு ஜனவரி 30ஆம் தேதிக்குள் விளக்கம் தரும்படியும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் பிரச்சனையை இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துவிட்டதாகவும், பொங்கல் தினத்தில் 'ஐ' உறுதியாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
ஷங்கர்-விக்ரம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக உழைத்த திரைப்படம் 'ஐ' என்பது குறிப்பிடத்தக்கது.

Comments