ஆர்யா செய்த வேலையால் விஷாலுக்கு வந்த சோதனை!!!

22nd of January 2015
சென்னை:பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஆம்பள படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஷால் நானும், சுந்தர்.சியும் இணைந்து உருவாக்கிய மதகஜராஜா என்ற படம் 2012 பொங்கலில் வெளியாகவேண்டியது ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.
 
இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை எடுத்து அதை
எப்படியாவது பொங்கலுக்கு வெளியிடவேண்டும் என்ற வெறி மட்டும் தான் எனக்குள் இருந்தது, அதற்காக கடுமையாக உழைத்த இந்த ஆம்பள படத்தின் மொத்த குழுவுக்கும் நன்றி. அதோடு இனி வரும் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே நடத்த கூடாது என முடிவெடுத்துள்ளேன்.
 
அப்படியே இசை வெளியீட்டு விழா நடத்துனாலும் என்னுடைய
நண்பர்கள் யாரையும் கட்டாயம் அழைக்கமாட்டேன். ஏன்ன இந்த ஆர்யா ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுக்கு தான் இதற்கு காரணம். அப்படி என்ன பேசினார்….என்ன மச்சான் இந்த பொங்கலுக்கு நிறைய படம் வருதே, ஆம்பள படத்த வேற இப்ப ரிலீஸ் பண்ணுறனு கேட்ட அப்போ எவனா இருந்தாலும் வெட்டுவேன்னு சொன்னான் என்று பேசி குண்ட தூக்கி விஷால் மேல போட்டார்.
 
உடனே கொந்தளித்த அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் விஷாலை போட்டு கழுவு கழுவுனு கழுவி ஜலதோசம் புடிக்கவச்சுட்டாங்க அதனால தான் விஷால் ஆம்பள படத்தின் சக்சஸ் மீட்டுல இப்படி ஒரு விளக்கம் கொடுத்தார் விஷால்.
 
இந்த குண்டு சாதாரண குண்டா இருந்த பரவாயில்லை அது நாட்டு வெடிகுண்டு மாறி பலமா வெடிச்சுருச்சு, நல்ல வேல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் வெளியீடு தள்ளி போனதால் அதோடு முடிந்துவிட்டது இல்லனா அது சரவெடி மாதிரி வெடிச்சுகிட்டே இருந்து இருக்கும்.

Comments