'புலி' படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்!!!

21st of January 2015
சென்னை:பொங்கல் பண்டிகை அன்று விஜய் தனது புலி படக்குழுவினருக்கு தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு ஆகியவற்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

'கத்தி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் 'புலி' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
 
இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகி வருக்கிறதாம். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துவிட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது தலக்கோணத்தில் விறு விறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்து வருகிறதாம் படக்குழு.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை விஜய் புலி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். பண்டிகை தினத்தில் கூட வேலை பார்த்த படக்குழுவினர் 265 பேருக்கு விஜய் தங்க காசு மற்றும் திருப்பதி லட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் அளித்த அன்பு பரிசை பார்த்து படக்குழுவினர் நெகிழ்ந்துவிட்டனராம்.
 
புலி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அவர் படத்தில் வரும் முதல் பாடலுக்கான ரெக்கார்டிங்கை முடித்ததும் அவரது இசையில் அசந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளனர்.

Comments