ஆபாச படங்கள் லீக் டுவிட்டரில் இருந்து விலகினார் வசுந்தரா!

10th of January 2015
சென்னை:பாய்பிரண்டுடன் நெருக்கமாக இருப்பதுபோல் நடிகை வசுந்தராவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டாப்லெஸ், பாய்பிரண்டுடன் நெருக்கமாக இருப்பது என 10க்கும் மேற்பட்ட அவரது ஆபாச படங்கள் வெளியானதை கண்டு திரையுலகினர்

அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிய வசுந்தராவை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது பெயரிலான டுவிட்டர் உள்ளிட்ட இணையதள பக்கங்களை அவர் நீக்கினார்.

ஆபாச படங்கள் வெளியாகி 2 வாரத்துக்கு பிறகு அவர் தனது மவுனத்தை கலைத்திருக்கிறார்.  இது பற்றி அவரது சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வசுந்தராவின் பெயரையும் இமேஜையும் கெடுப்பதற்காக யாரோ சிலர் என் படங்களை மார்பிங் முறையில் ஒட்டுவேலைகள்

செய்து வெளியிட்டிருக்கின்றனர் என கூறி உள்ளனர். முன்னதாக வெளியான தகவல்களில் நடிகையே இப்படங்களை வெளியிட்டதாக ஒரு தரப்பும், நடிகையின் ஸ்மார்ட் போனிற்குள் யாரோ திருட்டுத்தனமாக நுழைந்து அப்படங்களை திருடி வெளியிட்டதாக இன்னொரு தரப்பும் கூறியது.

Comments