ரசிகர்களை கவர வேதிகா புது டெக்னிக்!!!

30th of December 2014
சென்னை:பரதேசி, காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் வேதிகா. இவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்தளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர்களின் கவனத்தை கவரும் வகையில் புதுடெக்னிக் ஒன்றை கையாண்டிருக்கிறார். வழக்கமாக இணைய தள பக்கங்களை தொடங்கும் ஹீரோயின்கள் தங்களை பற்றிய விவரங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் வேதிகா இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார். அவர் தொடங்கி இருக்கும் இணைய தளத்தில் திறமைசாலிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் தளமாக பயன்படுத்திக்கொள்ள அழைத்திருக்கிறார்.

இதுபற்றி வேதிகா கூறும்போது,பிஎன்னுடைய இணைய தள பக்கத்தில் நிறைய ஓவியங்கள், வீடியோக்கள் வந்து குவிகின்றன. அவற்றில் சிலவற்றை நான் என் பக்கங்களில் வெளியிடுகிறேன். இதையே மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஏன் மாற்றக்கூடாது என்று யோசித்தேன். எனவே இதற்காக சிறப்பு பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் ரசிகர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். படைப்பாளிக்கு அதை வெளிப்படுத்த சரியான தளம் கிடைக்காவிட்டால் அது இறந்துபோனதற்கு சமம்.

அதேபோல் படைப்புக்குரிய விமர்சனமும் கிடைக்க வேண்டும். தங்கள் படைப்புகளை தங்கள் பக்கத்தில் வெளியிடும்போது அதற்கு குறைந்த அளவே வரவேற்பு கிடைக்கும். எனவேதான் இதற்காக தனி பக்கம் உருவாக்க முடிவு செய்தேன். உங்கள் படைப்பு எப்போது கவனிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி கவனிக்கப்படும்போது உங்கள் வாழ்க்கையே மாறும்' என்றார்.

Comments