போதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு அபராதம் போலீஸ் அதிரடி!!!

19th of December 2014
சென்னை:விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து இவர் சுப்ரமணியபுரம், ராஜா, ராணி, கோவா உள்பட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனியார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று கொண்டு இருந் தார். அப்போது மயிலாப் பூர் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். ஒவ்வொரு வண்டியாக மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது நடிகர் ஜெய்யின் கார் வந்துக் கொண்டு இருந்தது. போலீ சார் அவர் நடிகர் என்று தெரியாமல் சோதனை செய் தனர். அவர் மது அருந்தி இருப்பதும், 51 சதவீதம் ஆல்கஹால் கலந்து இருப்பதும் போலீசார் வைத்திருந்த கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது.
 
தொடர்ந்து போலீ சார் அவரை வாகனத்தை ஓரம் கட்டும்படி தெரிவித்தனர். நடிகர் ஜெய் வாகனத்தை ஒரம் கட்டுவதற்காக காரை ஓட்டிச் சென்றார். அப்போது சாலையில் ஓரமாக படுத்திருந்த ஒருவர் திடீரென கண் விழித்து எழுந்தார். உடனே பொதுமக்கள் அவர் மீது வாகனத்தை ஏற்றியதாக கூறி நடிகர் ஜெய்யை சூழ்ந்தனர். அதனை தொடர்ந்து தான் அவர் நடிகர் என தெரியவந்ததால், பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
 
இந்த திடீர் பரபரப்பால் ஜெய் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். தொடர்ந்து வேகமாக போலீசாரிடம் அபாரதத்துக்கான ரசீது பெற்றுக் கொண்டு சென்று விட்டார். அவர் நடமாடும் நீதிமன்றத்தில் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Comments