அஜித், விஜய் ரசிகர்களுக்குள் மோதலை உருவாக்க நான் விரும்பவில்லை: கே.வி.ஆனந்த்!!!

6th of December 2014
சென்னை:சோஷியல் நெட்வொர் பக்கங்களில் நடக்கும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருக்கின்றன. இப்படித்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் சமூக வலைதள பக்கத்தில் போலியான டிசைன் ஒன்றின் மூலம் அவர் ட்வீட் செய்ததுபோல ஒரு போஸ்டரை வெளியிட்டு யாரோ சில விஷமிகள் அவரை சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில் “விஜய்யின் 60வது படத்தை இயக்குவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது காதலும் ஆக்ஷனும் கலந்த படமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.. இதைப்பார்த்து அதிர்ச்சியான கே.வி.ஆனந்த், “இது பொய்யானது. அது என்னுடைய போஸ்ட் இல்லை” என மறுப்பு செய்தி போட்டார்.
 
கொஞ்ச நேரத்தில் அந்த டிசைன் அந்த விஷமிகளாலேயே அழிக்கப்பட்டு விட்டது.. ஆச்சர்யமாக கே.வி.ஆனந்தும் தான் தெரிவித்த மறுப்பு செய்தியையும் அழித்து விட்டாராம். காரணம் என்னவென்று கேட்டால், “இந்த செய்தியை அடிப்படையாக வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் மோதிக்கொள்வதை நான் விரும்பவில்லை” என்று சொல்லியுள்ளாராம்.

Comments