Kamal Hassan Commemorates our WWI Heroes Stills!!! உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரியாதை!!!

4th of November 2014
சென்னை:முதல் உலகப் போரின் 100வது ஆண்டு நினைவையொட்டி அதில் வீர மரணம் அடைந்த 74,187 வீரர்களின் நினைவாக ‘வாழும் நினைவாலயம்’ (The Pulse Foundation) என்ற அமைப்பு மரக்கன்றுகளை நட்டு வருகிறது. மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னோடிகளும் இந்த அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், முதல் உலகப் போரில் வீர மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாழும் நினைவாலயம் அமைப்புடன் சேர்ந்து மரக்கன்றை நட்டார். மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் கோத்ரேஜ் குரூப் தலைவர் ஆடி கோத்ரேஜ், சன்மார்க் (UK) தலைவர் டாக்டர் ரெம்மி ரேஞ்ஜர்,

 
நடிகர்கள் விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், கபீர் பேடி, முகேஷ் கண்ணா, நடிகைகள் ராய் லட்சுமி, அபிதா, தீபிகாசிங் மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவை தொகுப்பாளர்கள் இமசன் அண்ணாச்சி, ஆதவன், திண்டுக்கல் சரவணன் உள்ளிட்ட பலரும் வாழும் நினைவாலயம் அமைப்புடன் இணைந்து மரக்கன்று நட்டார்கள்.

















Comments