முருகாற்றுப்படை: திரை விமர்சனம்!!!

21st of November 2014
சென்னைஒரே கல்லூரியில் படிக்கும் நாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் காதலிக்கிறார்கள். இதற்கிடையில், கட்டுமான தொழில் செய்து வரும் நாயகனின் அப்பாவிடம், ஏரியா ரவுடி ஒருவர், கமிஷன் கேட்கிறார். அந்த பணத்தை கொடுக்காவிட்டால், நாயகனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.

கொலை மிரட்டல் காரணமாக, ரவுடிக்கு பணம் கொடுக்க செல்லும் இடத்தில் விபத்து ஏற்பட்டு, நாயகனின் அப்பா மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். இந்த விஷயம் நாயகனுக்கு தெரியவர, அவர், தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து, ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் கொண்ட அந்த ரவுடியை எப்படி அழிக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.


நாயகன் சரவணன், நாயகி நவீக்கா இருவருடைய முகமும், பட்டி டிங்கரின் பார்த்தது போல இருந்தாலும், நடிப்பில் இருவரும் ஓரளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

நாயகனின் அப்பாவாக நடித்திருப்பவரும், வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நரசிம்மனும் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளனர்.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்து கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சரவணனை ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காகவே, எழுதப்பட்ட கதைப் போல இப்படம் உள்ளது.

பழைய தமிழ் சினிமா பார்முலாவை பயன்படுத்தி இயக்குனர் முருகானந்தம் இயக்கியுள்ள, இப்படத்தின் காட்சிகளும், திரைக்கதையிலும் சுவாரஸ்யம் என்பது துளி அளவும் இல்லை.

Comments