டப்பிங் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்!!!

4th of November 2014
சென்னை:சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்திருக்கும் படத்துக்கு டைட்டில் டாணாவா காகிச்சட்டையா என்பது உறுதியாகாமல் இருந்தது.

தற்போது இப்படத்துக்கு காக்கிச்சட்டை என்ற டைட்டிலை உறுதிபடுத்தியுள்ளனர் தற்போது இப்படத்துக்கான டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது சிவகார்த்திகேயன் எப்போதுமே தனாக்கான டப்பிங் வேலைகளை இரண்டு அல்லது முன்று நாட்களில் முடித்துவிடுவார்.

ஆனால் தற்போது காக்கிச்சட்டை படத்துக்கு கூடுதலாக டைம் எடுத்து பேசி வருகிறாராம் காரணம் இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பதால் குரல் கொஞ்சம் கணிர்னு இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று போலிஸ் கெட்டப்புக்கு பொருத்தமாக இருக்குமாறு பேசிவருகிறாராம் அதனால்தான் தாமதமாகி வருகிறதாம் இதுவரை காமெடியும் காதலும் கலந்த நடிப்பில்தான் சிவகார்த்திகேயனை பார்த்திர்போம் ஆனால் காக்கிச்சட்டை படத்தில் ஒரு கனமான ஆக்சன் ஹீரோவாக பார்கலாம் என்கிறார்கள்.

Comments