சிங்காரவேலன் சுயம்புலிங்கமாக மாறிய கதை!!!

11th of October 2014
சென்னை:காலம் மாற மாற நடிகர்களின் முகத்தோற்றங்களும் அவர்களது ஆரம்ப கால உருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கும்.. மீண்டும் அவர்கள் தங்களது இருபது வருடத்திய உருவத்தை வெளிக்கொணர்வதும் நடைமுறைக்கு அவ்வளவாக ஒத்துவராத ஒன்று.. ஆனால் ரஜினி, கமல் இருவரும் அந்தவகையில் வரும்போதே வரம் வாங்கி வந்தவர்கள்..
சிவாஜி’ படத்தில் ரஜினியின் உருவத்தை பார்த்த எல்லோருமே அதில் இருபது வருடத்துக்கு முந்தைய பழைய ரஜினியை பார்த்ததாக சிலாகித்தனர். இப்போது கமல் நடித்துவரும் ‘பாபநாசம்’ படத்தில் அவரது உருவத்தோற்றம் 199௦களில் அவர் நடித்த ‘வெற்றிவிழா’, ‘சிங்கார வேலன்’ ஆகிய படங்களில் அவர் இருந்த உருவத்தை அப்படியே பிரதிபலிக்கிற விதமாக இருப்பது பார்த்தாலே தெரிகிறது. இதற்கு காரணம் அவரது மீசை..

உத்தம வில்லன்’ படத்தில் மீசையில்லாமல் நடித்துக்கொண்டிருந்த கமல், படத்தை முடித்த கையோடு உடனே ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் நுழைந்து விட்டதால் ஒட்டுமீசை வைத்துக்கொண்டுதான் நடித்து வந்தார். இடையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சிறிது இடைவெளி கொடுக்கப்படவே, ஒரிஜினலாகவே மீசையை இப்போது வளர்த்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். ஆக சிங்காரவேலன் இப்போது சுயம்புலிங்கமாகவே மாறிவிட்டார்.

Comments