ஜெயம் ரவிக்கு ஜெனிலியாதான் நெருங்கிய நண்பராம்!!!

23rd of October 2014
சென்னை:புதுமுக ஹீரோக்களில் இருந்து வளர்ந்து வரும் ஹீரோக்கள் அனைவருக்கும் ஒரு ஆசை முன்னணி நடிகை த்ரிஷா, நயன்தாரா ,அனுஷ்கா , ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உண்டு ஆனால் அனைத்து ஹீரோகளுக்கும் நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் அந்த வகையில் ஜெயம் ரவிக்கு நயன்தாராவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அந்த ஆசை நிறைவேறும் படி தன் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 
தனி ஒருவன் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் இதுகுறித்து ஜெயம் ரவியிடம் கேட்டால் :எனக்கு நாயன்தாரவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசைதான்.

ஆனால் தற்போது நயன்தாராவுடன் தனி ஒருவன் படத்தில் நடிப்பது எனக்கு குஷியெல்லாம் இல்லை, ஏனென்றால் தனக்கு இணையான கதாபத்திரத்தில்தான் நயன்தாரா நடித்துவருக்கிறார் .
 
அதனால் அவருடன் போட்டிபோட்டு நடிக்க வேண்டியதாக இருக்கிறது அதோடு தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளுடனும் நான் உயிர்த்தோழராகி விடுகிறேன் என்று சொல்கிறார்கள் ஆனா நான் அப்படியெல்லாம் இல்லை ஒரே படத்தில் நடிப்பதால் படப்பிடிப்பி தளத்தில் அவர்களுடன் ஜாலியாகா பேசுவேன் மற்றபடி க்ளோஸ் பிரண்டுயெல்லாம் கிடையாது.
 
ஆனால் ஜெனிலியா மட்டும் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரிண்ட் அவருடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடிக்கும் போதே நாங்கள் இருவரும் நல்ல பிரண்டாகிட்டோம் இப்போதும் கூட ஜெனிலியா அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பாரு என்னுடைய குடும்பத்தில் ஒருவருனு கூட சொல்லலாம் அந்த அளவுக்கு நாங்க ரொம்ப க்ளோஸ் பிரண்ட் என்றார் ஜெயம்ரவி.

Comments