ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் சூர்யா!!!

27th of October 2014
சென்னை:
புதுமுகங்களை வைத்து ‘அட்ட கத்தி’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகான ரஞ்சித், தனது இரண்டாவது படமாக ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம் இயக்குநர் ரஞ்சித், பல்வேறு அமைப்புகளில் பாராட்டைப் பெற்று சில விருதுகளையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மெட்ராஸ் படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, மெட்ராஸ் படம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டது, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் தானும் ஒரு படம் நடிக்கப்போகிறேன், என்று கூறியுள்ளாராம். மேலும் தனது சொந்த நிறுவனமான 2டி நிறுவனத்தின் மூலம் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிக்கவும் போகிறாராம்.

Comments