மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘குற்றம் கடிதல்!!!

2nd of October 2014சென்னை:நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘பரதேசி’, ‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட பல தரமான படங்களை வெளியிட்டு வரும் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் தற்போது தயாரித்து வெளியிடும் படம் ‘குற்றம் கடிதல்’.

ஜிம்பாப்பே நாட்டில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  முதல் 11ஆம் தேதி வரை  நடக்க உள்ள சர்வதேச திரை பட விழாவில்  கலந்துக் கொள்ள தகுதி பெற்ற ‘குற்றம் கடிதல்' மும்பையில்  அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை  நடக்க உள்ள 16ஆவது திரைப்பட விழாவில் 'இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்' என்ற தகுதியின் கீழ் திரையிடப்பட உள்ளது.


’ஆயிரத்தில் ஒருவன்’, ’ஆரண்யா காண்டம்’ அடுத்து ’குற்றம் கடிதல்’ தான் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தகக்து.

இது குறித்து கூறிய தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், “இந்த மாதிரியான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரம், ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஒரு வலுவான கருத்து  உருவாக பெரிதளவு உதவுகிறது. விளம்பரங்கள் மிக மிக அவசியம் என கருதப்படும் இந்த கால கட்டத்தில் இது பெருமளவுக்கு உதவும்.

திறமையான இளைஞர்களின் சங்கமம் ஆக இருக்கும் 'குற்றம் கடிதல்' பட குழுவினருக்கு திரை உலகில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். முற்றிலும் புதியவர்கள் நடிக்கும் இந்த படம் தேசிய அளவில் மட்டும் இன்றி, சர்வதேச அளவிலும் பெயர் ஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை.” என்றார்.

'குற்றம் கடிதல்' படத்தின்  அறிமுக இயக்குநர் பிரம்மா.ஜி கூறும் போது, “’குற்றம் கடிதல்’ என்றால் கண்டித்தல்  அல்லது கடிந்து கொள்ளுதல் என பொருள். ஐந்து பல்வேறு வாழ்க்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதை தான் 'குற்றம் கடிதல்'.

என்னுடைய இந்த கருத்தை படமாக்க உதவிய எனது தயாரிப்பாளர்  ஜே.எஸ்.கே அவரது நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன்  மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ், கிறிஸ்டி அவர்களுக்கும் நன்றி.” என்று தெரிவித்தார்.

Comments