கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை - நடிகை ஓவியா!!!

27th of September 2014
சென்னை:கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை, என்று நடிகை ஓவியா கூறீயுள்ளார்.

சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'சண்டமாருதம்' படத்தில் நாயகியாக நடித்து வரும் ஓவியா, கும்பகோணத்தில் நடைபெறும் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.


அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ஓவியா கூறுகையில், "தமிழில் இது எனக்கு 8வது படமாகும். இதுவரை இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த நான் முதன்முதலில் நல்ல அனுபவம் வாய்ந்த சரத்குமாருடன் நடிக்க போகிறேன் என்பதை நினைக்கும் போது சற்று பயமாக தான் இருந்தது. ஆனால் அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் நடிக்கிறேன்.

எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா. அதேபோல இயக்குனர் சங்கரின் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்கலாம்." என்று தெரிவித்தார்.

Comments