பாலிவுட் போனது தமிழன்னு நிரூபிக்கத்தான்..” – ஏ.ஆர்.முருகதாஸ்!!!

19th of September 2014
சென்னை:கத்தி இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.. “ இந்தப்படம் எந்த அளவுக்கு வந்திருக்குன்னா, இதுக்கு பின்னாடி துப்பாக்கி படத்தை எடுத்திருந்தா நான் ஓ.பி. அடிச்சிருக்கேன்னு சொல்லுவீங்க.. அந்த அளவுக்கு துப்பாக்கியை விட அதிகமா உழைச்சிருக்கோம்.

நான் இந்தில படம் பண்ணப்போனது நிச்சயமா பணத்துக்காக அல்ல.. இந்தில இருக்குறவங்களுக்கு தமிழ்நாட்டுல ஏதோ ஒரு கிராமத்துல இருந்து வந்த என்னாலயும் சாதிக்க முடியும்னு சொல்லி தமிழன் யாருக்கும் சளைச்சவன் இல்லன்னு நம்மை நிரூபிச்சு காட்டத்தான் அங்க போனேன்..


இந்தப்படம் ஆரம்பிக்கிறப்ப பிரஷர் இருந்தது உண்மைதான்.. ஆனா சந்தோஷமான பிரஷர்.. ஒருபக்கம் எடிட்டிங், இன்னொரு பக்கம் டப்பிங், சவுன்ட் மிக்சிங்க்னு பரபரப்புல திடீர்னு போன வாரம் டெண்ஹ்சன் அதிகமானதுல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.. ஆஸ்பத்திரில கண்ணு முஜிக்கிரவரைக்கும் விஜய் சார் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராம் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்ட அன்புக்கு நான் எப்படி நன்றிக்கடன் செலுத்துறதுன்னு தெரியல”

நிச்சயம் தமிழர்களுக்கு நாங்க துரோகம் பண்ணலை.. துரோகம் பண்றதுக்காக படமும் எடுக்கலை.. நானும் தமிழன் தான்” என்று மனதில் இருந்தவற்றை நெகிழ்ச்சியுடன் கொட்டினார் முருகதாஸ்.

Comments