கத்தி’ படத்திற்காக அனிருத் இசயமைப்பில் யேசுதாஸ் பாட்டு!!!

16th of September 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தீபாவளியன்று இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர், இம்மாதம் 18ஆம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, இசையமைப்பாளர் அனிருத், கத்தி படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக விஜய் பாடிய பாடல் ஒன்றை சமீபத்தில் ஒலிப்பதிவு செய்த அனிருத், தற்போது, இப்படத்தின் பாடல் ஒன்றை யேசுதாஸை பாட வைத்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “கத்தி படத்திற்காக எனது இசையில் யேசுதால் ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல் தனக்கு தெய்வீக அனுபவத்தை தருகிறது.” என்று அனிருத் கூறியுள்ளார்.

Comments