விஷாலுக்கு அத்தையாக நடிக்கும் கிரண்!!!

30th of September 2014
சென்னை:தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது கவர்ச்சி நடிப்பால் சில காலம் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைத்த கிரண், பிரகு தெலுங்கு, கன்னடம் என்று நகர்ந்து தற்போது எங்கும் இல்லாமல் சினிமாவை விட்டே ஓதுங்கியிருந்தர்.

இந்த நிலையில், மீண்டும் நடிக்க விருப்பப்பட்ட அவரை தமிழ் சினிமா தாராளமாக வரவேற்றது. அதன்படி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துக்கொண்டிருக்கும் ‘ஆம்பள’ படத்தில் அவருக்கு ஒரு வேடமும் கிடைத்துள்ளது. அது என்ன வேடம் என்றால், விஷாலுக்கு அத்தை வேடமாம். இந்த படத்தில் விஷாலுக்கு கிரணுடன் சேர்த்து மொத்தம் மூன்று அத்தைகளாம், மற்ற இருவர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ஆவர்.


இந்த மூன்று அத்தைகளுக்கும் தலா ஒரு பெண் விதம் என்று மூன்று பெண்களாம். அந்த மூன்று பேர் தான் கதாநாயகிகள். அதில் ஒருவர் தான் ஹன்சிகா. மற்ற இருவரை சுந்தர்.சி தேடிக்கொண்டிருக்கிறாராம். தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்கு செல்ல தயாராக இருக்கிறது ஆம்பள படக்குழுவினர்.

Comments