திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று ரசிகர்களை சந்திக்கும் படக்குழுவினர்!!!

27th of September 2014
சென்னை:கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவான படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

பத்ரி இயக்கியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், பாலாஜி, ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.


இயக்குநர் பத்ரியும், பி.மதுசூதனன் என்பவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையும் வரவேற்பு பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேற்று, சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மேலும், இதேபோல தமிழகம் முழுவதிலும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கங்களுக்கு இப்படக் குழுவினர் நேரடியாக சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளார்களாம்.

Comments