ஹேப்பி பர்த்டே ட்டு சௌந்தரராஜா!!!

11th of August 2014
சென்னை:சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாரின் நண்பனாகவே வந்து திடீரென துரோகியாக மாறும் பரஞ்சோதியாக எல்லார் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டவர் சௌந்தரராஜா. சமீபத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.
 
மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சௌந்தரராஜாவை சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டு படங்களில் நடிக்க அழைத்து வந்தது சினிமாவின் மீது அவருக்கு இருந்த தாகம்தான்.
 
சினிமாவில் தான் எதிர்பார்த்த இடத்தை நோக்கி, சரியான திசையில் தான் முன்னேறிக்கொண்டு இருக்கிறார் சௌந்தரராஜா. இன்று பிறந்தநாள் காணும் சௌந்தரராஜாவுக்கு நமது poonththalir-kollywood சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

Comments